மேலும் அறிய

Natrampalayam: 2 நாட்கள் இருளில் மூழ்கிய 38 கிராமங்கள்; கிருஷ்ணகிரி நாட்றாம்பாளையம் பஞ்சாயத்தில் நடந்தது என்ன.?

கிருஷ்ணகிரி நாட்றம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 38 கிராமங்கள் கடந்த 2 நட்களாக இருளில் மூழ்கியிருந்தன. அதற்கு காரணம் என்ன.? பார்க்கலாம்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நிலத்தடி மின்சார கேபிள் பழுதுபார்க்கும் பணியின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நாட்றாம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களில் 2 நாட்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடைந்தனர்.

இருளில் மூழ்கிய 38 கிராமங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவில் உள்ள நாட்றாம்பாளையம் ஊராட்சியில் 38 கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, நிலத்தடி மின்சார கேபிள் பழுதுபார்க்கும் பணியின் காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதன்பின், பழுது பார்க்கும் பணிகள் நிறைவடைந்து, ஞாயிற்றுக் கிழமையான நேற்று இரவு சுமார் 7.30 மணி அளவில் தான் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், நாட்றாம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள 38 கிராமங்கள் 2 நாட்களாக இருளில் மூழ்கின.

நாட்றாம்பாளையம் மட்டுமல்லாமல், தொட்டமஞ்சு பஞ்சாயத்தில் உள்ள ஒரு பகுதி கிராமங்களும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் கோரிக்கை

நாட்றாம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு, பென்னாகரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. அங்கிருந்து வரும் மின்சாரம் அடிக்கடி தடைபடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால், பென்னாகரத்திற்கு பதிலாக, அஞ்செட்டியிலிருந்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, இப்பிரச்னை குறித்து மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளருடன் விவாதித்ததாகவும்,  இப்பிரச்னை தீர்த்து வைக்கப்படும் என்று கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

மின்வார வாரியம் கூறுவது என்ன.?

தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம் முதல் ஒகேனக்கல் வரை, நிலத்தடி மின் கேபிள்களில் ஏற்பட்ட சேதம் போன்ற பிரச்னைகள் குறித்து புகார்கள் பெறப்பட்டு, அவை சரி செய்யப்பட்டதாக மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்காக மின் கம்பியின் ஒரு பகுதி மேல்நிலை மின் பாதையாக மாற்றப்பட்டதால் காலதாமதம் ஆனதாகவும், அதனால் தான் மின்சாரத்தை மீண்டும் வழங்க ஞாயிற்றுக் கிழமை இரவு ஆனதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதோடு, அஞ்செட்டியில் இருந்து நாட்றாம்பாளையம் வரை மின்சாரம் வழங்குவதற்கான திட்டத்தை மாநில அரசுக்கு அவர்கள் வழங்கியுள்ளதாகவும், பிரச்னைகள் படிப்படியாக தீர்க்கப்படும் என்றும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
Edappadi Palanisamy: காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Christmas Cake Making | வந்தாச்சு கிறிஸ்துமஸ்!தனியார் சொகுசு ஹோட்டலில் தயாராகும் 200 கிலோ CAKE
90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ
SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
Edappadi Palanisamy: காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
Gold Rate Nov. 11th: மீண்டும் வேலையை காட்டும் தங்கம்; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்வு; தற்போது விலை என்ன.?
மீண்டும் வேலையை காட்டும் தங்கம்; இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்வு; தற்போது விலை என்ன.?
Udhayanidhi Stalin : ‘'சென்னையில் Global Sports City’ – விளையாட்டில் திராவிட கொள்கை’ ஓபனாக பேசிய உதயநிதி..!
‘சென்னையில் Global Sports City’ அதிரடியாக அறிவித்த உதயநிதி ஸ்டாலின்..!
Rahul Gandhi: பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
பொய்களால் கட்டமைக்கப்பட்ட ராகுல் காந்தியின் H-Files; அம்பலமான ‘வாக்கு திருட்டு‘ நாடகம்
UGC Fee Refund: கல்லூரியில் கட்டிய முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு- முழு விவரம்
UGC Fee Refund: கல்லூரியில் கட்டிய முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்; யுஜிசி புதிய அறிவிப்பு- முழு விவரம்
Embed widget