சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி நேற்று கூறியது
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் 6-ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா், திருப்பத்தூா் ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை  இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.


சென்னையைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா்


 




தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 130 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 120 மி.மீ., புதுக்கோட்டை, தஞ்சாவூா் மாவட்டம் அதிராமபட்டினத்தில் தலா 80 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 70 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 60 மி.மீ., மழை பதிவானது.


இந்நிலையில் அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மேலும் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் இரவு  பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை  12.5 சென்டிமீட்டர் அளவுக்கு விடிய, விடிய கொட்டி தீர்த்தது.  தொடர்ந்து இரண்டாவது நாளாக  இரவும்  40 மி.மீ., மழைபெய்தது.




 


 


இந்த மழையால் கிருஷ்ணகிரி நகரின் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடைகளில் கழிவுநீர் வெளியேறி சாலைக்கு வந்தது. இதனால் பல இடங்களில் துர்நாற்றம் வீசியது. மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் மழைநீர் குளம் போல தேங்கியது. அதன் அருகில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது.


இதே போல சேலம் சாலையில் உள்ள அக்ரஹரம் பகுதியில்  500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் இரவு பெய்த மழையால் 100 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் சென்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.  மேலும் இந்த பகுதியை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வர சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் இதனைக் கருத்தில் பொதுமக்களுக்கு எந்தவொரு சிரமம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை  ஏற்பாடுகள் செய்யவேண்டும் என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.