கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எர்ரஅள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். 


இந்த விபத்தில் தருமபுரியை சேர்ந்த சவலூரை சேர்ந்த முத்து(20), மல்லி (60), முனுசாமி (50), வசந்தி (45) மற்றும் 3 மாத குழந்தை வர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.