பொங்கலை முன்னிட்டு கரூரில் பூக்கள், வாழைத்தார் விலை கிடு கிடுவென உயர்வு

மார்கழி மாதத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது.வாழைத்தார் விலை கடந்த வாரத்தை காட்டிலும் விலை உயர்வால்  பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Continues below advertisement

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரூரில் பூக்கள் மற்றும் வாழைத்தார் விலை கிடு கிடுவென உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Continues below advertisement



பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் கரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள  பூக்கள் விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வந்த பூக்களின் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது.  ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000 முதல் 4000 வரை  விற்பனையாகிறது. முல்லை பூ ரூ.3000, ஜாதி பூ ரூ.2500, அரளி ரூ.300 முதல் 400 ரூபாய்,செவ்வந்திப் பூ ரூ.250, ரோஜாப்பூ ரூ.250 முதல் 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பருவ மாற்றம் காரணமாக தற்பொழுது கடந்த வருடத்தை விட மூன்றில் ஒரு பங்கு மட்டும் வரத்து வந்துள்ளதால் தற்பொழுது பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் சில்லரை வியாபாரிகள் மற்றும் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.வ்மார்கழி மாதத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது.


பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் வாழைத்தார்கள் கடந்த வாரத்தை காட்டிலும் விலை உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் பண்டிகை கொண்டாட்டத்திற்கு தேவையான பொருள்களை வாங்க குவிந்துள்ளனர்.



இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் வி.வி வாழைத்தார் கமிஷன் மண்டியில் பூம்பழம் ஒரு தார் 1,000 ரூபாய்க்கும், ரஸ்தாலி 700 ரூபாய்க்கும், கற்பூரவல்லி 800 ரூபாய்க்கும், பச்சநாடன் 600 ரூபாய்க்கும், செவ்வாழை ஒரு பழம் 15 ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.


வாழைத்தார் விலை கடந்த வாரத்தை காட்டிலும் விலை உயர்வால் விவசாயிகள்,சில்லறை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும்  பொதுமக்கள் விலை உயர்வால் சிரமத்திற்கு உள்ளாகினர்

Continues below advertisement
Sponsored Links by Taboola