முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்வதை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உணவின் தரம் மற்றும் சுவையினை தெரிந்து கொள்ள குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்தினார்கள்.


 




 


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் தலைமையில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் முன்னிலையில் செய்தியாளர்களுடன் செய்தியாளர் பயணம் மேற்கொண்டு நேரில் பார்வையிட்டார்கள்.


 




 


 


கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.புதுக்கோட்டை மற்றும் வலையல்காரன்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்வதை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உணவின் தரம் மற்றும் சுவையினை தெரிந்து கொள்ள குழந்தைகளோடு அமர்ந்து உணவு அருந்தினார்கள். அதனை தொடர்ந்து வலையல்காரன்புதூர் தொக்கப்பள்ளில் ரூ.4.90 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் சமையல் அறை கூடத்தை பார்வையிட்டும், ரெங்கநாதபுரம் ஊராட்சி சாந்தி நகரில் ரூ.22.59 இலட்சம் மதிப்பில் ஜல் - ஜீவன் திட்டத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை வீடு வீடாக சென்று பார்வையிட்டும், பின்னர் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்தாம்பூர் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் பழுதுநீக்கம் செய்யப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு சமத்துவபுரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை கணக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசின் கைத்தறித்துறை ஆணையரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ராஜேஷ் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.


 




 


இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன்,  வட்டாட்சியர்கள் மோகன்ராஜ் (கிருஷ்ணராயபுரம்), சிவக்குமார் (கரூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, வினோத்குமார் (தாந்தோணி), மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.