தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியில் குடிநீர் இல்லை... வெயிலில் காத்திருந்த மாணவர்கள்..!

கரூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 1000 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணியின் முடிவில் 300 மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே குடிநீர், பிஸ்கட் பாக்கெட் வினியோகம்.

Continues below advertisement

கரூரில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி பதாகைகள் ஏந்தியவாறு கோசமிட்டபடி ஒரு கிலோ மீட்டர் பயணித்து திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவ, மாணவியர் பேரணியை முடித்துக் கொண்டனர் 1000 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணியின் முடிவில் 300 மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே குடிநீர், பிஸ்கட் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. 

Continues below advertisement

 


 

700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீண்ட நேரம் குடிநீர் வழங்காத காரணத்தால் வெயிலில் கால் கடுக்க காத்து கொண்டிருந்தனர். கரூர் வருவாய் வட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குடிநீர் கூட விநியோகம் செய்யாமல் மாணவ, மாணவிகளை கால் கடுக்க காக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 


நாட்டில் உள்ள அனைவருக்கும் ஓட்டுரிமை உள்ளது  பெருமையுடன் நாம் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளோம் அதுபோல தான்  வாக்காளர் அடையாள அட்டை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக வாக்காளர் பட்டியலில்  நமது பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.  18 வயது முடிந்தவுடன் அனைவருக்கும் ஓட்டு போடும் உரிமை உள்ளது.  தேர்தல் வரும் பொழுது நாம் நேர்மையாக ஓட்டு போட வேண்டும் நம்முடைய தொகுதியில் யார் போட்டி போடுகிறார்கள்? அதுபோன்ற அரசியல் பதிவுகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் இதை அனைவரும் செய்ய வேண்டும்.

 

1947 இல் சுதந்திரம் கிடைத்த பிறகு அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எல்லாருக்கும் சட்டம் போடப்பட்டு எந்த விதமான வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் ஓட்டுரிமை 18 வயது நிரம்பிய அனைவருக்கும் ஓட்டுரிமை கட்டத்தில் மிக மோசமாக இருந்தது படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்து என்ன செய்யப் போகிறார்கள் என்றார்கள்.  ஆனால் வெற்றிகரமாக இத்தனை ஆண்டுகளாக தொடர்ச்சியாக தேர்தல் நடத்தி மக்களாட்சி முறையை நிலைநிறுத்தி வருகின்றோம். அதற்கு முக்கிய காரணம் இந்த ஓட்டுரிமை இந்த ஜனநாயகம் இதற்கு இந்த தேர்தல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 

நாம் அனைவருக்கும் சமம் அந்த காலத்தில் படித்தவர்கள் பெரிய ராஜாக்கள் ஒரு கல் அவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கக்கூடியதாக இருந்தது ஆனால் இப்பொழுது அனைவருக்கும் சமம் ஈரு காலத்தில் மக்களாட்சியாக இல்லாமல் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை,  இப்பொழுது நீங்கள் உரிமைகளை தெரிவிப்பதற்கு ஒரு இடம் உள்ளது இப்பொழுது நீங்கள் அனைவரும் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் நீங்களும் மக்களாட்சியில் நீங்களும் போட்டி போட்டு வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறும் உள்ளது. இதனை நாம் பெருமையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். மிண்டும் நினைவூட்டும் வகையிலும் கண்டிப்பாக 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் தங்களுடைய ஓட்டு உரிமைக்கான வழிகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியவாறு மாணவ மாணவிகள் திறனில் கலந்து கொண்டனர்.



 

Continues below advertisement
Sponsored Links by Taboola