காவிரி ஆற்றில் தொடர்ந்து சரியும் நீர்வரத்து.


காவிரி ஆற்றில் மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. மாயனூர் கதவனைக்கு  முன்தினம் வினாடிக்கு 16,97 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 13,487 கன அடியாக குறைந்தது. டெல்டா பாசன சம்பா சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் 12,367 கன அடி தண்ணீரும் நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


 




அமராவதி அணை


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை வினாடிக்கு 858 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 794  கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 88.69 அடியாக இருந்தது. அமராவதி ஆற்றில் 100 அடி கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 250 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு முன்தினம் 1,821 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றுப்பகுதிகளில்  மழை குறைவால் காலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,589 கனஅடியாக குறைந்தது.


நங்காஞ்சி அணை


திண்டுக்கல் மாவட்டம் நங்காஞ்சி அணைக்கு வடக்காடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 69 கன அடி தண்ணீர் வந்தது.  ஆற்றில் வினாடிக்கு 29 காண அடி தண்ணீர் திறக்கப்பட்டது.  நான்கு பாசன கிளை வாய்க்கால்களில் வினாடிக்கு தலா 10 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 39. 37 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 39.34 கன அடியாக இருந்தது.




ஆத்துப்பாளையம் அணை


கரூர் மாவட்டம் கா. பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அனைக்கு காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 26.17 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


பொன்னணி ஆறு அணை




கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 28 அடியாக இருந்தது.