குளித்தலை அருகே சிவாயம் நெடுஞ்சாலையில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவ,மாணவிகள் அரசு பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


 


 




கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் நெடுஞ்சாலையில் அய்யனூர் பகுதியில் பணிக்கம்பட்டியில் இருந்து குளித்தலைக்கு அரசு பேருந்து இயங்குகிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்லும்  பொதுமக்களும் போதிய பேருந்து வசதி இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவாயம் நெடுஞ்சாலையில் வழித்தடத்தில் காலை முதல் மதியம் வரை ஒரு பேருந்து மட்டும் வருவதால், இதில் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதில் சுற்று வட்டார பகுதிகளில் பள்ளி குழந்தைகளும் பொதுமக்களும்  பயணிப்பதால் போதிய பேருந்து இல்லாததால் அதிகளவில் பள்ளி மாணவர்கள் படிகளில் தொங்கியபடியே பள்ளிக்குச் செல்லும் பொழுது உயிர் அச்சத்துடன் பயணிக்கின்றதாக கூறப்படுகிறது.


 




 


இதனை அடுத்து சிவாயம் நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளும் ஊர் பொதுமக்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை போலீசார் பள்ளி குழந்தைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களுக்கு அரசு பேருந்து ஏற்படுத்தி தருகிறோம் என கூறிய நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 


 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண