கரூர் மாவட்டம் குளித்தலையில் தாய்நாடு நதிநீர் இணைப்பு சங்கம் மற்றும் வடிவேல் நினைவு அறக்கட்டளை சார்பில் மாபெரும் எல்கை பந்தய போட்டி நடைபெற்றது.


கரூர் மாவட்டம் குளித்தலையில் தாய்நாடு நதிநீர் இணைப்பு சங்கம் வடிவேல் நினைவு அறக்கட்டளை மற்றும் மணத்தட்டை பகவதி பாய்ஸ் சார்பில் மாபெரும் எல்கை பந்தய போட்டி நடைபெற்றது. இதில் மாடுகளுக்கான தேன் சிட்டு மாடு, சிறிய ஒத்தை மாடு, பெரிய ஒத்தை மாடு,  குதிரைகளுக்காக புதிய குதிரை, சிறிய குதிரை, பெரிய குதிரை,  உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.




குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், தாய்நாடு நதிநீர் இணைப்பு சங்க மாநில கெளரவ தலைவர் சூரியனூர் சக்திவேல் போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.இந்த எல்கை பந்தயப் போட்டியில் காளைகள் மற்றும் குதிரைகள் எல்லைக்கோட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன. தேன் சிட்டு மாட்டிற்கு 5 மைல் தொலைவும், சிறிய ஒத்தை மாடு, பெரிய ஒத்தை மாடு, 8 மைல் தொலைவும், புதிய குதிரைக்கு 6 மைல் தொலைவும், சிறிய குதிரைக்கு 8மைல் தொலைவும், பெரிய குதிரைக்கு 10 மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள், குதிரைகள் கலந்து கொண்டு எல்லைக் கோட்டில் இருந்து சீறிப்பாய்ந்தன




இந்த எல்கை பந்தய போட்டியில் குறைவான நேரத்தில் இலக்கை எட்டி பிடித்து  வெற்றி பெற்ற குதிரை மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன. இந்த எல்கை பந்தயம் போட்டியினை பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று  ஆராவரத்துடன் கண்டுகளித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண