கரூர் மாவட்டத்தில் கல்வி இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




குறிப்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு இடங்களில் பள்ளிக்கூட மணி அடிச்சாச்சு நிகழ்ச்சி மூலம் இதுவரை 150 குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கல்வி பெற்று வருகிறார்கள். இந்நிலை மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளின்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் 19.12.2022 முதல் 11.01.2023 முடிய ஆறு முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா மற்றும் பள்ளியில் இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுப்பு பணி (மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) நடைபெற உள்ளது.
 
கல்வி காவலர் திட்டம்.




பள்ளி செல்லாக் குழந்தைகள் எவரேனும் தங்கள் ஊரிலோ அல்லது வீட்டின் அருகிலோ இருந்தால் பொதுமக்கள் 1098 எண்ணிற்கோ அல்லது 8903331098 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ தகவல் அளிக்கலாம். மேலும் இடைநிற்றல் குழந்தைகள் கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பவருக்கு பாராட்டு சான்றிதழும் பரிசும் வீட்டிற்கே வந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படும். அதிக எண்ணிக்கையில் மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பவர்களுக்கு "கல்வி காவலர்" என்ற சிறப்பு பட்டம், குடியரசு தின விழா அன்று வழங்கி கௌரவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர்  தெரிவித்தார்கள்.




23ஆம் தேதி குறைதீர் கூட்டம் எரிவாயு விநியோக புகார்களை தெரிவிக்கலாம் கரூர் கலெக்டர் அழைப்பு. 




வருகிற 23ஆம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எரிவாயு விநியோக புகார்களை தெரிவிக்கலாம் என்று கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் மற்றும் நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக வரப்பெறும் புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளைகள் விநியோகத்தை சீர்படுத்த வசதியாக கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டிசம்பர் 23ஆம் தேதி மாலை 3:30 மணி அளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் இந்த நாளில் நடைபெறும் குறைதீர்க்க கூட்டத்தில் கலந்து கொண்டு, எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.




ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம். என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றுக்கு இணங்க வீடுகள் இல்லாத ஏழை எளிய மக்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 1152 வீடுகளை 699.31 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வழங்கி வருகிறது.


கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக கரூர் வட்டம்  கிராமத்தில் 192 வீடுகள் குழு 16.08 கோடி மதிப்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வீட்டின் மதிப்பு 8.38 லட்சம் இதில் பயனாளியின் பங்குத்தொகை 1.88 லட்சம் மாநில அரசின் பங்கு தொகை குரூப் 5 லட்சம் மத்திய அரசின் பங்குத் தொகை 1.50 இலட்சம் ஆகும். கரூர் வட்டம் புலியூர் கிராமத்தில் 258 அடுக்குமாடி குடியிருப்புகள் 24.91 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வீட்டின் மதிப்பு 8.65 லட்சம் இதில் பயனாளின் பங்கு தொகை ஒரு லட்சம் மாநில அரசன் பங்குத்தொகை 6.15 லட்சம் மத்திய அரசின் பங்குத்தொகை 1.50 இலட்சம் ஆகும்.