மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 25  பயனாளிகளுக்கு. ரூ. 1,85,337 மதிப்பில்  அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர்  வழங்கினார்.


 


                                                                                                                                                                                                                                               

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 25  பயனாளிகளுக்கு ரூ.1,85,337 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற நடைபெற்ற போன்றவைகள் கேட்டு மொத்தம் 475 மனுக்கள் பெறப்பட்டது.  இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 54 மனுக்கள் பெறப்பட்டது. 


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 


 




 


அந்த வகையில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 3 நபருக்கு  ரூ.37500 இலட்சம் மதிப்பிலான திறன்பேசியும், 4 நபர்களுக்கு ரூ.11,120 மதிப்பிலான காதொலி க்கருவிகளையும், 5 நபர்களுக்கு ரூ.9,175 மதிப்பீட்டில் பிரெய்ரி கை கடிகாரம், 1 நபர்க்கு ரூ.7,650 மதிப்பீட்டில் மூன்று சக்கர நாற்காலியும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பீட்டில் ரூ.1,00,000 மதிப்பிலான சிறுதொழில் உதவித்தொகையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாணமைத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.19,892 மதிப்பீட்டில் நவின தையல் இயந்திரத்தினையும் என மொத்தம்  25 பயனாளிகளுக்கு ரூ.1,85,337 மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் .பிரபுசங்கர்  வழங்கினார்கள்


 




 


இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ம.கண்ணன், திட்ட இயக்குநர்கள் திருமதி.வாணிஈஸ்வரி (ஊரக வளர்ச்சி முகமை), திரு.சீனிவாசன் (மகளிர் திட்டம்) தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி)திரு.சைபுதீன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் திருமதி.சந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் திருமதி.காமாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.