"காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது"

Continues below advertisement

வடகிழக்கு பருவமழை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. 

அதன்படி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், கோயம்புத்தூர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரையிலான மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

மேலும் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட வானிலை நிலவரம் - Kanchipuram Weather Forecast Today 

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்ட வானிலை நிலவரம் - Chengalpattu Weather Forecast Today 

இன்று செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தாம்பரம் மற்றும் பல்லாவரம் ஆகிய பகுதிகளில் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. மாமல்லபுரம் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருவள்ளூர் மாவட்ட நிலவரம் - Thiruvallur Weather Forecast Today 

திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை சென்னையின் புறநகர் பகுதிகளாக இருக்கக்கூடிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.