தவெக அமைச்சரவையில் விசிக- முஸ்லிம் லீக்

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோல்வியை தழுவிய நிலையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனையடுத்து ஆட்சி அமைக்க 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமைந்திட கூடாது என்பதற்காக திமுக கூட்டணி கட்சிகளாக இருந்த விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் முதலமைச்சராக விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது.

Continues below advertisement

இதனையடுத்து முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், அமைச்சரவையில் விடுதலை சிறுதைகள் மற்றும் முஸ்லிம் லீக் இடம்பெற வேண்டும் என தவெக கோரியது. இதனையடுத்து இரண்டு கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சரவையில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. 

திருச்சி கிழக்கில் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னி அரசுக்கு சமூத நீதித்துறையானது ஒதுக்கப்பட்டது. முஸ்லிம் லீக் கட்சி எம்எல்ஏ ஷாஜஹானுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கப்பட்டது.  அதே நேரம் முதலமைச்சர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அமைச்சரவையில் இடம்பெற வலியுறுத்தி வருகிறார். ஆனால்  தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திருமாவளவன் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு அமைச்சரவையில் இடம்பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement

சிதம்பரம் தொகுதியில் தவெக.?

அந்த வகையில் தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில், தவெகவின் ஆதரவோடு விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமாவளவன் தனது சிதம்பரம் எம்பி பதவியை ராஜினாமா செய்தபின் அந்த காலி இடத்திற்கு நடக்கும் இடைத்தேர்தலில் தவெக போட்டியிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.