Isha Maha Sivarathiri: ஈஷாவில் பிப்ரவரி 15-ல் மகா சிவராத்திரி விழா; பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில், வரும் 15-ம் தேதி மகா சிவராத்திரி விழா கோலாகலகமாக நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்தி சிங் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில், வரும் 15-ம் தேதி மகா சிவாராத்திரி விழா நடைபெற உள்ளது. அதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்றேப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஷா மகா சிவராத்திரி விழா - ராஜ்நாத் சிங் பங்கேற்பு
ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 15-ம் தேதி மாலை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவை முன்னிட்டு நடந்த செய்தியாளர் சந்திப்பு
இந்த மகா சிவராத்திரி விழா தொடர்பான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ரவீந்திரன் மற்றும் தன்னார்வலர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
செய்தியாளர் சந்திப்பின் போது, "ஈஷாவில் 32-வது மகா சிவராத்திரி விழா 15-ம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.“ என்று நிர்வாகிகள் கூறினர்.

மேலும், “15-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதில் சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஸ்வரலிங்க மகா அபிஷேகம் மற்றும் சிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.“ என்றும் கூறினர்.
அதோடு, இந்த ஆண்டு, முதன் முறையாக சத்குரு ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் யோகேஸ்வர லிங்கத்திற்கு மகா அபிஷேகம் எனும் ஆன்மிக செயல்களை அர்ப்பணிக்க உள்ளார்" எனவும் தெரிவித்தனர்.
விழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்
இந்த விழாவின் போது, மக்களின் வசதிக்காக தேவையான பார்க்கிங் இடவசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறைகள், மருத்துவ வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தர உள்ளதாகவும் ஈஷா யோகா மைய நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.
மேலும், ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா, இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும், தமிழ்நாட்டில் 60 இடங்களிலும், கேரளாவில் 29 கோவில்களிலும் நேரலை செய்யப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.























