CM Stalin: "மாநிலங்களோடு மட்டுமல்ல; உலக நாடுகளோடு போட்டி இருக்க வேண்டும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

நூற்பாலைகளில் உள்ள நிரந்தர தொழிலாளர்களுக்கு, மாதம் ரூ. 2, 500 வீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

பன்னாட்டுத் தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கில், ஆன்லைன் வழியாக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

Continues below advertisement

ஒவ்வொரு துறையிலும் நமது அரசு பன்னாட்டளவிலான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அதில் தொழில்துறை முன்னணியில் இருக்கிறது. உலகத்தரத்திலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். விளையாட்டுத் துறையில் உலகப் புகழை அடைந்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நிறுவனங்களைத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த வரிசையில் துணிநூல் துறையின் சார்பில் முதல் முறையாக ஜவுளித் தொழில் குறித்தான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நம்முடைய போட்டி என்பது இந்திய மாநிலங்களோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு இணையானதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறையானது மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியடிகளின் அடையாளம் கதர் என்பதைப் போல நம்முடைய அமைச்சர் காந்தியின் அடையாளமாகத் துணிநூல் துறையானது அமைந்துவிட்டது.

    • சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் ரூ. 2 கோடியே 50 லட்சம் அரசு மானியத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது.
    • சென்னையில் ஜவுளி நகரம் (Textile City) அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • துறையின் கீழ் இயங்கும் 5 கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா ரூ. 2.500/- வீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது.
    • மூன்று கூட்டுறவு நூற்பாயைகளில் 11 கிலோவாட் உயர் மின்னழுத்த மின்பாதைகள் (Dedicated Electrical Power Feeder Line) நிறுவிடத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.திறமைவாய்ந்த சிறந்த தொழில்நுட்ப பணியாளர்களையும் கொண்டுள்ளது.
    • இத்தகைய தனித்தன்மையின் காரணமாக அனைத்துத் துறைகளிலும் நாம் பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறோம். இதில் ஜவுளித்துறையும் ஒன்றாக இருக்கிறது.
    • ஜவுளித் துறையை பொறுத்தவரை, நமது மாநிலம் அன்னிய முதலீட்டினை ஈர்ப்பதிலும், ஏற்றுமதியில் 3-ஆவது பெரிய இடத்திலும் இருக்கிறது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக ஜவுளித் தொழில் உள்ளது. அதனால்தான் நமது அரசு பொறுப்பேற்றவுடன் புதிதாக ஜவுளித் துறை என்ற ஒன்றை உருவாக்கியது.
    • இதன் தொடர்ச்சியாக, தொழில்நுட்ப ஜவுளித் தொழிலின் உலகளாவிய போக்கினை அறிந்து, பன்னாட்டுக் கருத்தரங்கினை இந்த அரசு நடத்துகிறது.எல்லாத்துறைகளும் வளர வேண்டும், அதில் புதுமைகளைப் புகுத்த வேண்டும், உயர் தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வி வருகிறோம். அதற்கு ஏற்ற கொள்கைகளை வகுத்து தந்து வருகிறோம்.

தமிழ்நாடு அரசின் தொழில்துறை மூலாக

1 முதலீட்டு மானியம்,

2) தொழில்நுட்ப ஜவுளி பிரிவானது “சன்ரைஸ் செக்டார்"(Sunrise Section) என அடையாளம் காணப்பட்டு சலுகைகள்

3) தொழிற்பூங்கா அமைப்பதற்கான உதவிகள்,

4 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) நிதி உதவி, 51 ஒற்றைச் சாளர வசதி (Single window clearances)

5) முத்திரைப்பதிவுக் கட்டண சலுகைகள் போன்ற பல்வேறு சலுகைகள்வழங்கப்படுகிறது.

வளர்ந்து வரும் துறைகள் இனத்தில் (Thrust Sector) தொழில்நுட்ப ஜவுளி சேர்க்கப்பட்டு ஜவுளி தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு முதலீட்டு மானியம் ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம் வழங்கப்படுகிறது. ஜவுளி தொழில் நாடு எப்போதுமே முன்னணி வகிக்கக்கூடிய மாநிலம். இந்தியாவின் ஜவுளி வருவாயில் மட்டும் 12 விழுக்காடு பங்களிப்பை தமிழ்நாடு வழங்குகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கருத்தரங்கில் உரையாற்றினார்.

Continues below advertisement