மேலும் அறிய

​60 பைக்குகள்... 2 லாரிகள்... வேலூர் வரை நீளும் நெட்வொர்க்! ஸ்ரீபெரும்புதூரில் சிக்கிய கொள்ளை கும்பல்!

"காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பைக் திருட்டு சம்பவத்தின் பின்னணியில் காவலர்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது."

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக புதிய இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாகி வந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனங்களை மீட்டுத் தருமாறு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகார்களை அளித்தனர். இந்த தொடர் திருட்டு சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிய கொள்ளையர்கள்

புகார்களின் அடிப்படையில், குற்றவாளிகளைப் பிடிக்க ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். சம்பவ இடங்களில் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை போலீசார் விரிவாக ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. அந்த காட்சிகளின் அடிப்படையில் துப்பு துலக்கிய போலீசார், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சரத்பாபு (40) மற்றும் விமல்குமார் (31) ஆகிய இருவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்

கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் திருடப்படும் புதிய இருசக்கர வாகனங்களை, அவர்கள் வேலூர் மாவட்டம் கணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று மிகக் குறைந்த விலைக்கு விற்றுள்ளனர். ஒரு பைக்கை வெறும் 7,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரையிலான விலைக்கு விற்று, சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதை: காவலரின் கூட்டு

இந்த விசாரணையில் மிக முக்கிய திருப்பமாக, இவர்களின் திருட்டுத் தொழிலுக்குப் பின்னணியில் ஒரு போலீஸ்காரரே கைகோர்த்திருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த, கணியம்பாடி மேற்குளத்தைச் சேர்ந்த தமிழ்நாடு பட்டாலியன் காவலர் மணிகண்டன் (32) என்பவருக்கு இந்த திருட்டு கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காவலர் மணிகண்டன் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திலேயே வேலைப் பார்த்துக்கொண்டு, உள்ளூர் நிலவரங்களை வேவு பார்த்து இந்த திருட்டு கும்பலுக்கு ரகசியமாக உதவி செய்துள்ளார். மேலும், இருசக்கர வாகனங்களை விற்று வரும் பணத்தில் அவரும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்தனர். சட்டத்தைக் காக்க வேண்டிய காவலரே கொள்ளைக் கும்பலுக்கு உடந்தையாக இருந்த சம்பவம் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2 லாரிகளில் பறிமுதல் மற்றும் நீதிமன்றக் காவல்

குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில், வேலூர் மாவட்டத்திற்கு விரைந்த போலீசார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த திருட்டு வாகனங்களை மீட்டனர். மொத்தமாக 60-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு, அவை வேலூரிலிருந்து 2 பெரிய லாரிகள் மூலம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, பைக் திருட்டில் ஈடுபட்ட சரத்பாபு, விமல்குமார் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்த காவலர் மணிகண்டன் ஆகிய மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget