IAS Officers Transfer: தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்..! யார் யார் மாற்றம்..?

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். 

Continues below advertisement

  • வணிக வரித்துறை இணை ஆணையராக வீர் பிரதாப் சுங் நியமனம்
  • பட்டு வளர்ப்புத்துறை இயக்குநராக பணியாற்றி வந்த விஜயா ராணி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமனம்.
  • சிறுபான்மையினர் நல இயக்குநராக ஆசியா மரியம் நியமனம்.
  • தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் முதன்மை செயலாளர், தலைவர், நிர்வாக இயக்குனராக விஜயகுமார் நியமனம்.
  • பட்டு வளர்ப்புத்துறை இயக்குநராக சந்திரசேகர் சகாமுரி நியமனம்.
  • அடையாறு கூவம் மறுசீரமைப்பு திட்ட சிறப்பு அலுவலராகவும் விஜயகுமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு சிறு தொழில் கழகத்தின் (டான்சி) முதன்மை செயலாளர், தலைவர், நிர்வாக இயக்குநராக ஸ்வர்ணா நியமனம்.
  • தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் (டான்செம்) நிர்வாக இயக்குநராக ஆர். கண்ணன் நியமனம்.
  • நாகை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமையின் திட்ட அலுவலராக ரஞ்சித் சிங் நியமனம்.
  • சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமையின் திட்ட அலுவலராக அலர்மேல்மங்கை நியமனம்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola