இன்று இந்த 10 மாவட்டங்களில் இருப்பவர்கள் உஷார்! வானிலை ஆய்வு மையம் திடீர் எச்சரிக்கை!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கடந்த 24 மணி நேர மழை நிலவரம்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று காலை 8:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 6 சென்டிமீட்டர் (6 செ.மீ.) மழை பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சி மற்றும் மழை எச்சரிக்கை
கடலோர கர்நாடகம் முதல் கடலோர ஆந்திரா வரை, வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை (ஜூன் 8, ஜூன் 9) தமிழகத்தின் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, தமிழகத்தின் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், கோவை, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதி நிலவரம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Before You Go
TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
ட்ரெண்டிங் செய்திகள்






















