விழுப்புரம்: காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 49,000 டன் கொள்ளளவில், ஆறு நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், 69.82 கோடி ரூபாயில் கட்டப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு.

Continues below advertisement

விரைவில் நவீன நெல் சேமிப்பு கிடங்கு 

தஞ்சாவூர், திருவாரூர் உட்பட ஐந்து டெல்டா மாவட்டங்களில், 399 கோடி ரூபாயில் 2.63 லட்சம் டன் கொள்ளளவில், மேற்கூரை அமைப்புடன் கூடிய, நவீன நெல் சேமிப்பு வளாகம் அமைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற மன்ற விவாத நேரத்தில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

Continues below advertisement

நுகர்வோர் சேவைகளை மேம்படுத்த, 20 லட்சம் ரூபாயில், நுகர்வோர் குறைதீர் இணையதளம், மொபைல் செயலி உருவாக்கப்படும். மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார் ஆகிய டெல்டா மாவட்டங்களில், அடிப்படை வசதிகளுடன் கூடிய 2.63 லட்சம் டன் கொள்ளளவில், மேற்கூரை அமைப்புடன் கூடிய 20 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், 399.19 கோடி ரூபாயில் கட்டப்படும் என்றும் 

49,000 டன் கொள்ளளவில், ஆறு நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 49,000 டன் கொள்ளளவில், ஆறு நவீன நெல் சேமிப்பு வளாகங்கள், 69.82 கோடி ரூபாயில் கட்டப்படும்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நிரந்தர கட்டடங்கள், தலா 30 லட்சம் ரூபாய் வீதம், 15 கோடி ரூபாயில் கட்டப்படும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின், அலுவல் பணிகளை திறம்பட மேற்கொள்ளவும், கொள்முதல் மற்றும் பொது வினியோக திட்ட பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்த, 'இ - ஆபீஸ்' எனப்படும், மின் அலுவலக செயலாக்கம், 100 சதவீதம் அமல்படுத்தப்படும்

அதிநவீன வசதிகளுடன் கூடிய, அதிக திறனில் நெல் கொள்முதல் நிலையங்கள், திருவாரூரில் இரண்டு, நாகை, மயிலாடுதுறையில் தலா ஒன்று அமைக்கப்படும் என்றும் ஒட்டன்சத்திரத்தில், அலுவலகம் மற்றும் எடைமேடையுடன் கூடிய 3,400 டன் கொள்ளளவு உடைய நவீன சேமிப்பு கிடங்கு; 5 கோடி ரூபாயில் சேமிப்பு கிடங்கு கட்டப்படும் என சட்டமன்றத்தில் கூறினார். 

சமீபத்தில் பெய்த மழையின் போது விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைக்கப்பட்ட 10,000த்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் முழுவதும் மழையில் நனைந்து வீணானது, இந்நிலையில் நெல் மூட்டுகளை பாதுகாக்கும் விதமாக நெல் சேமிப்பு கிடங்கு கட்டப்படும் என்ற அறிவிப்பு மூலம் விவசாயிகள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.