மேலும் அறிய

நோயாளிகளுக்கு அழுக்கான டிரஸ்! மதுரை அரசு மருத்துவமனைக்கு எதிராக குவியும் புகார்கள்

ராஜாஜி அரசு மருத்துவமனையில் (GRH) அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு அசுத்தமான ஆடைகள் தரப்படுவதாக தொடர் புகார்கள் குவிந்து வருகின்றன. காசு கொடுத்து புதிய ஆடைகளை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக நோயாளிகள் வேதனை.

மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் (GRH) அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு அசுத்தமான ஆடைகள் தரப்படுவதாக தொடர் புகார்கள் குவிந்து வருகின்றன. இதன் காரணமாக, காசு கொடுத்து புதிய ஆடைகளை வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து, நோயாளிகளுக்கு வேட்டிகள், சட்டைகள் மற்றும் ஸ்கர்ட்களை குறைவான விலையில் விற்க ராஜாஜி அரசு மருத்துவமனை திட்டமிட்டு வருகிறது.

நோயாளிகளுக்கு அழுக்கான டிரஸ் வழங்கப்படுகிறதா?

நாட்டிலேயே சிறந்த மருத்துவ வசதிகளை கொண்ட மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு. பிற மாநிலங்களில் இருந்து மட்டும் இல்லாமல் பல நாடுகளில் இருந்தும் உயர் சிகிச்சைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டை தேடி வருகின்றனர்.

இப்படியிருக்க, மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனை குறித்து புகார்கள் குவிந்து வருகின்றன. அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக வரும் நோயாளிகளுக்கு அசுத்தமான ஆடைகளை தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்போது உடுத்த வேண்டிய ஆடைகளை மருத்துவமனையே வழங்குவது வழக்கம். 

அரசு மருத்துவமனைக்கு எதிராக குவியும் புகார்கள்:

ஆனால், அறுவை சிகிச்சை தொடங்கப்படுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர், எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், வேட்டிகள், சட்டைகள் மற்றும் ஸ்கர்ட்களை வாங்க சொல்லி நோயாளிகளை செவிலியர்கள் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டை மறுத்த மருத்துவனை அதிகாரிகள், "நோயாளிகள் புதிய ஆடைகளை வாங்குவதற்குப் பதிலாக வீட்டிலிருந்து சுத்தமான ஆடைகளைக் கொண்டு வரலாம். தமிழகம் முழுவதும் உள்ள பல அரசு மருத்துவமனைகள் இதே போன்ற நடைமுறைகளைத்தான் பின்பற்றி வருகின்றன" என்றார்.

கட்டாயப்படுத்தும் செவிலியர்கள்:

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத நோயாளிகள் கூறுகையில், "அறுவை சிகிச்சைக்கு முன்பும், அறுவை சிகிச்சைக்குப் பிறகும் ஆண்கள் அணிவதற்காக புதிய வெள்ளை வேட்டி, சட்டைகளும் பெண்கள் அணிவதற்காக பாவாடைகளும் வாங்க வேண்டும் என சொல்கின்றனர். 

மருத்துவமனைக்கு அருகிலுள்ள உள்ளூர் கடைகளில் இருந்து பெரும்பாலும் வாங்கப்படும் இந்த ஆடைகள், அவற்றின் விலையை விட அதிகமாக இருக்கிறது. சில நோயாளிகள் ரூ.1,500 வரை செலவிட வேண்டி இருக்கிறது" என்றார்கள்.

நடந்தது என்ன?

இதுகுறித்து இதய நோயாளி முனியம்மாள் கூறுகையில், "தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நான் இங்கு பரிந்துரைக்கப்பட்டேன். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, நான் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டேன்.

அறுவை சிகிச்சைக்கான தேதி உறுதி செய்யப்பட்ட பிறகு, செவிலியர்கள் மூன்று செட் வெள்ளை சட்டைகள் மற்றும் பாவாடைகளை வாங்கச் சொன்னார்கள். அறுவை சிகிச்சையின் போது ஒரு செட் அணிய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள்.

என் மகள் ரூ. 1,500க்கு மூன்று செட்களை வாங்கினார். சிகிச்சை இலவசம் என்றாலும், அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முன்பு செவிலியர்களின் கோரிக்கையால் நாங்கள் எரிச்சலடைந்தோம். இவை குறைந்த விலையில் வழங்கப்பட்டால், அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

இதுகுறித்து ராஜாஜி அரசு மருத்துவமனையின் ரெசிடென்ட் மருத்துவ அதிகாரி (RMO) எஸ். சரவணன் கூறுகையில், "அறுவை சிகிச்சைக்கு முன்னரோ அல்லது பின்னரோ நாங்கள் யாரையும் துணிகளை வாங்க கட்டாயப்படுத்துவதில்லை.

நோயாளிகள் அணியும் ஆடைகளிலிருந்து தொற்று ஏற்படுவதைத் தவிர்ப்பதே இதன் நோக்கம். நோயாளிகளிடமிருந்து எங்களுக்கு பல புகார்கள் வந்ததால், கோரிக்கையை பரிசீலித்து, மருத்துவமனையில் குறைந்த விலையில் துணிகள் கிடைப்பதை உறுதி செய்வோம்" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
Embed widget