TN Govt employees : அரசு ஊழியர்களுக்கு குஷியோ குஷி.! காப்பீடு, கடன் சலுகைகள் - அசத்தலான அறிவிப்பை சொன்ன தமிழக அரசு
TN Govt employees : சம்பளக் கணக்கு வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு காப்பீடு, கடன் சலுகைகள் வழங்கும் வகையில் வங்கிகளுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஆயுள் காப்பீடாக 10 லட்சம் ரூபாயும், தனிப்பட்ட விபத்து காப்பீடாக 1 கோடி ரூபாயும் வழங்க அந்த வங்கிகள் ஒப்புக்கொண்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான சலுகைகள்
அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகளை மத்திய மற்றும் அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, பண்டிகை கால முன்பண சலுகை, மகப்பேறு கால விடுமுறை அதிகரிப்பு என பல அறிவிப்புகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கும் போதும், விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் போது மருத்துவ செலவுக்காக பல லட்சம் ரூபாய் தேவைப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் பணத்தை கட்ட முடியாமல் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்ட வந்தனர்.
இதனையடுத்து தங்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இதனை செயல்படுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மாநில அரசுப் ஊழியர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் கடன் சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் படி தமிழக அரசு ஊழியர்களுக்கு சில சிறப்பு சேவைகளை வழங்க முன்னணி வங்கிகள் வழங்க முன்வந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
வங்கிகளோடு தமிழக அரசு ஒப்பந்தம்
அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு மாதம், மாதம் சம்பளம் வரும் வங்கி கணக்கு இருக்கும் இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 முன்னணி வங்கிகளுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஆயுள் காப்பீடாக 10 லட்சம் ரூபாயும், தனிப்பட்ட விபத்து காப்பீடாக 1 கோடி ரூபாயும் வழங்க அந்த வங்கிகள் ஒப்புக்கொண்டது. மேலும் தனிப்பட்ட விபத்து காப்பீட்டின் மூலம் இறந்துபோன அரசு ஊழியரின் குழந்தைகளுக்கு கல்வி உதவிகள் மற்றும் திருமணமாகாத பெண் பிள்ளைகளுக்கு திருமண உதவிகளை வங்கிகள் வழங்க வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டு, இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு வங்கிகளிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அரசு ஊழியர்களுக்கு காப்பீடு மற்றும் கடன் சலுகைகள்
இந்த நிலையில் இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 முன்னணி வங்கிகளுடன் சேர்த்து மேலும் 3 வங்கிகளான பஞ்சாப் நேஷனல் வங்கி, டி.என்.எஸ்.சி,பாங்க் ஆப் இந்தியா இந்த சலுகைகளை தங்களிடம் சம்பளக் கணக்கு வைத்துள்ள அரசு ஊழியர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.எ னவே இந்த வங்கிகளுடனும் அரசுக் கருவூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் காப்பீடு மற்றும் பல்வேறு சலுகைகளை பெற வாய்ப்பு உருவாகியுள்ளது.























