வரும் ஜனவரி 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. 


பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெறுவதற்கு ஏதுவாக வரும் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பணி நாளுக்கு பதிலாக பிப்ரவரி 26ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது என்று கூட்டுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.