புதுச்சேரி: கட்சியை வலுப்படுத்துவதற்காக நிறுவனராக இருந்த சமூகநீதிக்காவலர் மருத்துவர் ராமதாஸ் கட்சி அமைப்பு விதி 13 திருத்தங்களின்படி கட்சியின் தலைவராக நிர்வாகக் குழு மற்றும் செயற்க்குழு ஆகியவற்றின் முடிவின்படி 30.05.20025 முதல் செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் ஆக செயல்படுவார் என மாநில சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்.

Continues below advertisement

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான பட்டானூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த சிறப்பு பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த பொதுக்குழுவில் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், தலைவர் என 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில் கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த ஓராண்டுக்கு தலைவர் பதவியில் அன்புமணி நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Continues below advertisement

இந்நிலையில், இன்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் பொதுக் குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக பாமகவில் புதிய விதி 35 உருவாக்கம் செய்யப்பட்டு, அதன்மூலம் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கு தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் டாக்டர். ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் டாக்டர் ராமதாசிற்கு மட்டுமே வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பொதுக்குழு முதல் 10 தீர்மானம்:

 

1. கட்சியை வலுப்படுத்துவதற்காக நிறுவனராக இருந்த சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் கட்சி அமைப்பு விதி 13 திருத்தங்களின்படி கட்சியின் தலைவராக நிர்வாகக் குழு மற்றும் செயற்க்குழு ஆகியவற்றின் முடிவின்படி 30.05.20025 முதல் செயல்பட்டு வரும் நிலையில் மருத்துவர் அய்யா அவர்கள் பா.ம.க நிறுவனர் மற்றும் தலைவர் ஆக செயல்படுவார் என்பதை 17.08.2025 இன்றைய மாநில சிறப்பு பொதுக்குழு ஒருமனதாக அங்கீகரிக்கிறது.

தீர்மானம் 02: 

வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அதிக இடங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற உரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி,வெற்றிக் கூட்டணியை உருவாக்க மருத்துவர் அய்யா அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

தீர்மானம் 03: 

வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5% தனி இட ஒதுக்கீடு மருத்துவர் அய்யா அவர்களின் தீவிர முயற்சியால் கடந்த ஆட்சி காலத்தில் சட்டமாக்கப்பட்டு, தற்பொழுது நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. ஏமாற்றத்தையும், அளித்து மிகுந்த வேதனையையும் உருவாக்கி உள்ளதால் சமூகநீதிக்காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் மீண்டும் போராடி உறுதியாக பெறுவோம்.

தீர்மானம் 04: 

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டு அளவை உறுதி செய்ய ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் தட்டிக் கழித்து வருவது கண்டனத்துக்குரியது. சில மாநிலங்களில் நடத்தியது போல உடனே ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

தீர்மானம் 05: 

தமிழ்நாட்டில் மது விற்பனையால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை குடிகாரர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து குடும்ப பொருளாதாரம், குழந்தைகள் கல்வியும் பாதித்து. பெண்கள் தற்கொலை உயிரிழப்புகள் அதிகரிப்பதோடு கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டின் மக்களை காக்க மதுவை ஒழிக்க முழு மதுவிலக்கு (பூரண மதுவிலக்கு) நடைமுறைப்படுத்த வேண்டும்.

தீர்மானம் 06:

தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தங்கு தடை இன்றி விற்பனை செய்வதால் மாணவர்கள். இளைஞர்கள் என பாதிக்கப்படுவோர் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. போதைப் பொருள் ஒழிப்பை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி போதை பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும்.

தீர்மானம் 07: 

பூம்புகாரில் 10.08.2025 மகளிர் பெருவிழா மாநாட்டிற்கு உழைத்தவர்களுக்கும்,கலந்து கொண்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சக்திமிக்க சகோதரிகளுக்கும், அனுமதி பாதுகாப்பு வழங்கியவர்களுக்கும், கலை குழுவினருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

தீர்மானம் 08:

 "நீரின்றி அமையாது உலகு" என்பதற்கிணங்க மழைக்காலங்களில் காவிரி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் உபரி நீர் நூற்றுக்கணக்கான TMC அளவுக்கு கடனுக்கு வீணாகச் செல்கிறது. இதை தடுத்து முறையாக பயன்படுத்த காவிரி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணைகள் கட்ட வேண்டும்

தீர்மானம் 09:

தர்மபுரி பின்தங்கிய மழையளவு குறைந்த, வளமற்ற மாவட்டத்தின் வாழ்வாதார வளர்ச்சிக்கு ஒகேனக்கல் பகுதியிலிருந்து நீரேற்று மூலம் தர்மபுரி - காவிரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தீர்மானம் 10: 

தமிழ்நாடு நீர் ஆதாரத்தில் கடைமடை மாநிலமாகவும், மழையற்ற காலத்தில் வறட்சி மாநிலமாகவும் மாறி குடிநீர் பஞ்சமும், பாசனமும் அற்ற மாநிலமாகவும் அடிக்கடி உருவாகிறது. இதை போக்க காவிரி -கோதாவரி இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.