தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே திமுக - தவெக கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பாப்பா மாடல் என்று திமுக-வை விமர்சித்ததற்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அளித்த பதில் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

ஆர்எஸ் பாரதி கருத்து:

அவரது பேட்டியைத் தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பாப்பானுக்கு பதில் சொல்லமாட்டேன் என்று சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்லத் திராணி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

விக்டிம் கார்ட்:

அமைச்சர் ரமேஷின் இந்த பதிவிற்கு திமுக ஐடி விங் விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில், கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் "பாப்பா" (Baby) என்று மிகத் தெளிவாகவும், மீண்டும் வலியுறுத்தியும் பேசிய பிறகும், 

Continues below advertisement

அதை வேண்டுமென்றே சாதிய ரீதியாகத் திரித்து, 'விக்டிம் கார்டு' மூலம் சமூகப் பதற்றத்தை உண்டாக்கப் பார்க்கும் அரசியல் அப்பட்டமாகத் தெரிகிறது!

அழுகினி நாடகங்கள்:

அமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு, இவ்வளவு மலிவான அரசியலைச் செய்யும் உங்களுக்கு அந்த இருக்கையில் அமரும் தகுதிதான் இருக்கிறதா?

வாயைத் திறந்தாலே பச்சைப்பொய்களையும், வதந்திகளையும் கொட்டி மக்களைக் குழப்பும் இந்த 'தமிழக விக்டிம் கார்டு கழகத்தின்' (Tamilaga Victimcard Kazhagam) அழுகுனி நாடகங்கள் இனியும் எடுபடாது!

SRM விவகாரத்தில் நீங்கள் செய்ததாக அங்கும், உங்கள் வீடு அமைந்துள்ள மறைமலை நகர் பகுதி மக்களும் உங்களைப் பற்றித் துப்பிக் கொட்டும் உண்மைகளும் திமுகவுக்கு தெரிந்து விட்டதே என்பது உங்களுக்கு வலிக்கத் தானே செய்யும்!

இவ்வாறு பதிவிட்டுள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக திமுக - தவெகவினர் சமூக வலைதளங்களில் மாறி, மாறி கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.