ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ., சரவணனை திமுகவில் இணையுமாறு பேசம் பேசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். 

Continues below advertisement

தவெக எம்.எல்.ஏ.,க்கள் இழுக்க முயற்சி

 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 6 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ.  இளையராஜாவை திமுகவுக்கு இழுக்க பல கோடி வரை பணம் பேசப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதுதொடர்பாக 8க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Continues below advertisement

இந்த சதி திட்டத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில் கைது செய்யும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ.  சரவணன் புகார்

இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ., சரவணன் தன்னை திமுகவில் சேர சொல்லி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ மற்றும் தன்னை அணுகிய நபரின் போட்டோ ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தான் வெற்றி பெற்றதை பொறுக்க முடியாமல் தொடர்ந்து திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் சமூக வலைத்தளங்கள் மூலமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

மேலும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் என சொல்லிக் கொண்டு சிலர் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் என்னை சந்தித்தனர். அப்போது ரூ.50 கோடி தருகிறோம். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவுக்கு வந்து விடுங்கள் என சொன்னதாக தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு என் வாகனத்தின் மீது லாரி மோதியது. இது எனக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Also Read: Loyalo Mani: உச்சநீதிமன்றத்தில் தர்ம அடி.. திமுகவின் பச்சை அயோக்கித்தனம்.. விளாசிய லயோலா மணி!

அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்த பதில்

இதனிடையே திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. சரவணன் வைத்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மேலும் எனக்கு வேண்டுமானால் ரூ.50 கோடி தாருங்கள். அவ்வளவு பணம் என்பது எவ்வளவு இருக்கும் தெரியுமா?.. நான் ஒன்றும் லாட்டரி வியாபாரமோ, கஞ்சா வியாபாரமோ செய்யவில்லை. நான் பெண்களை மானபங்கப்படுத்த சொல்லவில்லை. இதையெல்லாம் செய்தவர் சொல்வது தான் தவறானது என தெரிவித்துள்ளார்.