AIADMK Split: திமுக - அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்ன டெல்லி.. இபிஎஸ் செய்த செயல்.. சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
CV Shanmugam vs Edappadi Palanisamy: 25 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் முதலமைச்சர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 22 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். இதனால் அதிமுகவில் பிளவு உச்சத்தை அடைந்துள்ளது.

பொதுச்செயலாளர் சட்டமன்ற கொறடாவை நேரடியாக நியமனம் செய்ய முடியாது, எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வதாக அதிமுக எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து 3ம் இடத்திற்கு சென்றுவிட்டது. அக்கட்சி சார்பில் 47 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையிலான 25 எம்.எல்.ஏ.,க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவெக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தனர். அப்போது பேசிய சி.வி.சண்முகம், “25 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். 22 எம்.எல்.ஏ.,க்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில கருத்துகளை தெரிவித்துள்ளார். நான் அதிமுக பொதுச்செயலாளர். என்னால் நியமனம் செய்யப்பட்ட உத்தரவை மீறி வாக்களித்துள்ளார்கள் என சொல்கிறார். இது முற்றிலும் தவறானது. சட்ட ரீதியாக தவறான கருத்தைப் பொதுவெளியில் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் சட்டமன்ற கொறடாவை நேரடியாக நியமனம் செய்ய முடியாது. சட்டமன்ற குழு கூட்டம் நடைபெற்று அதில் தலைவர், துணைத்தலைவர், கொறடா தேர்வு செய்யப்பட வேண்டும். இதுதான் மரபாக இருந்து வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, நான் நியமனம் செய்தேன் என சொல்கிறார். அவர் கொறடாவை நியமனம் செய்ய முடியாது.
இவர் தான் ஒரு கட்சியின் கொள்கை முடிவுகளை கொறடாவுக்கு சொல்ல, அவர் சட்டமன்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு உத்தரவுகளை கொடுப்பார். இதுதான் சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் நடைமுறையாகும். இபிஎஸ்க்கு தெரியாதது எதுவும் இல்லை. தன்னுடைய பலவீனத்தை மறைக்க இப்படி தவறான ஒரு தகவலை எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நான் சட்டமன்ற தலைவராக எம்.எல்.ஏ,க்களால் தேர்வு செய்யப்பட்டதாக கூறுகிறார். அது அப்பட்டமான பொய். இபிஎஸ் எம்.எல்.ஏ.,க்கள் 47 பேரின் கையெழுத்தைப் பெற்றதாக சொல்கிறார். அப்படிப்பட்ட கூட்டம் எங்கு, எப்போது நடைபெற்றது என்பதை சொல்ல முடியுமா?
அப்படி ஒரு கூட்டம் நடக்கவில்லை. நாங்கள் அவரை சந்தித்த ஒரு கூட்டத்தின் புகைப்படத்தை காட்டுகிறார். கூட்டம் நடந்ததற்கான நோட்டை காட்ட முடியுமா? பாண்டிச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார் தெரியுமா?. நான் மேலே பேசிவிட்டேன். அங்கு சம்மதம் சொல்லி விட்டார்கள். நாம் ஆட்சியமைக்கிறோம். நான் முதலமைச்சராகிறேன். திமுக வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும்” என கூறியதாக சி.வி.சண்முகம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது அதிமுக பொதுச்செயலாளர் என்ற வார்த்தையை சி.வி.சண்முகம் தவிர்த்துள்ளார். இதனால் அதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















