Cuddalore Power Shutdown 23.07.2025: கடலூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் துணை மின் நிலையம் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று (23.07.2025) புதன்கிழமை கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படலாம். பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும், மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு நல்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: 

மின்தடை நேரம் : காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மின்தடை பகுதிகள் :

கடலுார் முதுநகர், செம்மங்குப்பம், வீரன்சாவடி, பெரியக்குப்பம், ஆலப்பாக்கம், தானுார், கருவேப்பம்பாடி, பிள்ளையார் மேடு, கண்ணாரப்பேட்டை, சம்பா ரெட்டிப்பாளையம், பூண்டியாங்குப்பம், சித்திரைபேட்டை, அய்யம்பேட்டை, பள்ளி நீர் ஓடை, ஆதிநாராயணபுரம், சங்கொலிகுப்பம், சொத்திக்குப்பம், நஞ்சலிங்கம்பேட்டை, நடுத்திட்டு, தியாகவல்லி, அன்னப்பன்பேட்டை.

ஆண்டார்முள்ளிபள்ளம், மடம், சிப்காட், ராசாப்பேட்டை, மாலுமியார்பேட்டை, சோனாஞ்சாவடி, தம்மனாம்பேட்டை, காயல்பட்டு, தீர்த்தனகிரி, காரைக்காடு, பச்சையாங்குப்பம், சிங்காரத்தோப்பு, கம்பளிமேடு, திருச்சோபுரம், சிந்தாமணிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படும் என்பதால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.