2014ம் ஆண்டு நடந்த ஆணவக் கொலை! இரண்டு பெண்கள் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் - நீதிமன்றம்

காதல் விவகாரம் தொடர்பாக இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

கடந்த 2014 ஆம் ஆண்டு புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சீதா என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். சீதா என்ற வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை சரவணன் என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டார். அதற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு வந்தனர். எதிர்ப்பு எழுந்த நிலையில், சீதாவை அவரது தாய் வீட்டுக்குச் செல்லுமாறு கணவர் சரவணன் கட்டாய்ப்படுத்தியுள்ளார்.

Continues below advertisement

தீ வைத்து கொலை:

தாய் வீட்டுக்கு சீதா செல்ல மறுத்ததால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவரது கணவர் சரவணன், அவரது தாயார் செல்வி, அக்கா சகுந்தலா மற்றும் அக்காவின் கணவர் வெங்கடேசன் ஆகியோர் சேர்ந்து சீதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை தீ வைத்து எரித்துள்ளனர்.

இரட்டை ஆயுள்:

இந்த வழக்கானது கடலூர் எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியானது. இளம்பெண்ணை கொலை செய்ததுடன், கொலையை மறைக்க உடலை எரித்த 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.   

Continues below advertisement
Sponsored Links by Taboola