தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. 108 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றதால் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. 

Continues below advertisement

சிபாரிசுக்கு வரும் கூட்டணி கட்சி:

ஆட்சி மாற்றம் நடந்தது முதலே அதிகாரிகள் மாற்றம் அடிக்கடி நடந்து வருகிறது. மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக விஜய் இருந்து வரும் சூழலில், தற்போது கீழ்மட்டத்தில் பல இடங்களில் ஊழல் பெருமளவில் குறைந்துள்ளதாக தொடர்ந்து மகிழ்ச்சியான செய்திகள் வருகிறது. 

கறார் உத்தரவு போட்ட விஜய்:

அதேசமயம், கூட்டணி கட்சித்தலைவர்கள், சில அமைச்சர்கள் வாரியத் தலைவர் பதவி, சில முக்கிய பதவிகளுக்கு சிபாரிசுகளுடன் விஜய்யை அணுகியுள்ளனர். அவ்வாறு அணுகியவர்களுக்கு முதலமைச்சர் விஜய் கறாராக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். 

Continues below advertisement

அதாவது, சிபாரிசுக்காக எந்தவொரு அமைச்சரும், கூட்டணி கட்சித் தலைவர்களும் தன்னிடம் வரவே கூடாது என்பதே அந்த உத்தரவு ஆகும். விஜய்யின் இந்த உத்தரவால் கூட்டணி கட்சியினர் பலரும் அதிருப்தியில் உறைந்துள்ளனர். இதனால், விஜய்யிடம் தேவையில்லாத விவகாரங்களுக்காக அணுகுவதையும் தவிர்ப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

பணியிட மாற்ற முயற்சி:

மேலும், கடந்த காலங்களில் பணியிட மாற்றத்திற்காக பணத்தைக் கொடுத்து பணியிட மாறுதல் பெற்றவர்கள் போல, இந்த ஆட்சியிலும் அதேபோல பணம் மூலமாக பணியிட மாற்றத்திற்காக சில அதிகாரிகள் மூலமாக காய் நகர்த்தியுள்ளனர். ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளதா கவே தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தற்போதும் நியமனத்தில் உள்ள பல துறைகளின் செயலாளர்கள் மீது கடந்த காலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமைச்சர்கள், கட்சிக்கும் கறார் உத்தரவு

விஜய்யின் இந்த கறார் முடிவால் சிபாரிசு கனவுடன் இருந்தவர்கள் தற்போது கதிகலக்கத்தில் உள்ளனர். மேலும், தவெக-வினர் யாரும் சிபாரிசு அளவில் அமைச்சர்கள் யாரையும் அணுகக்கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவு பறந்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து அருண் மாற்றப்பட்டதும் விஜய்யின் அதிரடிக்கு ஒரு சிறந்த உதாரணமாகவே பலராலும் பார்க்கப்படுகிறது.

கடந்த கால ஆட்சிகளில் வழங்கப்பட்ட டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் விஜய் காய் நகர்த்தி வருவதால் அந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளும் தற்போது அச்சத்தில் உள்ளனர்.