CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
மு.க.ஸ்டாலின் முதல் சீமான் வரை அனைவரையும் இ்ன்று சந்தித்த முதலமைச்சர் விஜய் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இதுவரை நேரில் சென்று சந்திக்கவில்லை.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக தவெக தலைவரும், நடிகருமான விஜய் நேற்று பதவியேற்றார். பின்னர், முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட முதலமைச்சர் விஜய் இன்று சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
தலைவர்களைச் சந்தித்த முதலமைச்சர் விஜய்:
இன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை தானே நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றார். தேர்தல் களத்தில் இந்த கட்சிகள் அனைத்தும் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்த நிலையிலும், அவர்களை முதலமைச்சர் ஆன பின்பு தானே நேரில் சென்று விஜய் சந்தித்திருப்பதற்கு பலரும் வரவேற்பையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காதது ஏன்?
முக்கிய தலைவர்களைச் சந்தித்த முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இதுவரை நேரில் சென்று சந்திக்கவில்லை. அவர் அவரைச் சந்திக்காமல் இருப்பதற்கு அதிமுக-வில் தற்போது நடந்து வரும் உட்கட்சி மோதலே காரணம் என்று கூறப்படுகிறது. சட்டசபைத் தேர்தலில் நடந்த தோல்விக்கு பிறகு அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், எஸ்பி வேலுமணி அணி - எடப்பாடி பழனிசாமி அணி என்று இரு அணியாக அதிமுக உடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியை ஓரங்கட்டும் பணியில் சிவி சண்முகம் முன்னெடுப்பில் வேலுமணி தலைமையில் வேலைகள் நடந்து வருகிறது.
தவெக தனிப்பெரும்பான்மை இல்லாமல் தவித்து வந்த சூழலில், அவர்களுக்கு ஆதரவு அளித்து ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் ஒரு தரப்பினரும், தவெக-விற்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று ஒரு தரப்பினரும் கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் வெடித்த பிரச்சினையால் தற்போது அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே அதிமுக உறுப்பினர்கள் திரும்பியுள்ளனர். இதன் காரணமாகவும், எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் சந்திப்பா?
நாளை அல்லது வரும் நாட்களில் விஜய் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. தவெக ஆட்சியமைக்க உறுதுணையாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலைவர்களை ஏற்கனவே விஜய் நேரில் சந்தித்து நன்றி கூறியிருந்த நிலையில், திருமாவளவன் - விஜய் சந்திப்பு இதுவரை நிகழவில்லை.
விரைவில் திருமாவளவனை விஜய் சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீனையும் நேரில் சந்தித்து ஆசி பெறுவார் என்று கருதப்படுகிறது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















