தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் காளைகளை அடுக்குவது, பாரம் கல் தூக்குவது, கபடி, இசை நாற்காலி, ஓட்டப் பந்தய, கயிறு இழுத்தல், ஊசி நூல் கோர்த்தல், லெமன் ஸ்பூன், உரி உடித்தல், கோலப் போட்டிகள், கைப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் என பல்வேறு போட்டிகள் கிராமப் பகுதியில் நடைபெறுவது வழக்கம்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மக்கள் வரி பணத்தை தன் பெயரை குறிப்பிடாமல் கோயிலுக்கு தானமாக வழங்கிய பாண்டியர்கள்- கல்லூரி மாணவி ஆய்வில் புதிய தகவல்
அதே போல் அதிகளவு சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியில் 21 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தேவையானளவு பிரியாணி விழாக் குழுவினர் வழங்கினர். இந்த போட்டியில் முதலில் யார், அதிகளவு பிரியாணி சாப்பிடுகிறார்களோ, அவருக்கே முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் கிராம இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு சில்லி சிக்கன், பிரியாணி சாப்பிட்டனர். பொங்கல் விழாவில், ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டாலும், சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி மட்டுமே மக்களை வெகுவாக கவர்ந்தது. இந்த போட்டியினை கிராம மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- வடலூரில் 151ஆவது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - இணையதளம் வாயிலாக நிகழ்ச்சியை காண ஏற்பாடு