சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாட்டியஞ்சலி விழா: உலக நடனக் கலைஞர்களின் அர்ப்பணிப்பு! டாக்டர் வர்ஷினியின் சிறப்பான நடனம்
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாட்டியஞ்சலி விழா கோலாகலமாக தொடக்கம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் ஆலயத்தில் நாட்டியஞ்சலி விழா கோலாகலமாக தொடங்கியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜபெருமானும், காளியும் நடனம் ஆடியதாக ஒரு ஐதீகம். இந்த நடராஜர் ஆலயத்தில் சிதம்பரத்தை சுற்றி சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட நாட்டியாஞ்சலி நிகழ்வுகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில், நேற்று முதல் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாட்டிய அஞ்சலி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில், உலகில் உள்ள நாட்டிய கலைஞர்கள் தங்களது நடனத்தை நடராஜப் பெருமானுக்கு சிதம்பரத்திற்கு வந்து சமர்ப்பணம் செய்வார்கள். நடராஜர் ஆலயத்தில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பாக நேற்று தொடங்கிய நாட்டியஞ்சலி விழா வருகின்ற 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நாட்டிய அஞ்சலியில் டாக்டர் வர்ஷினி ராஜ மன்னனின் நாட்டியம் மிகவும் சிறப்பாக இருந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக நெய்வேலி நிலக்கரி கார்ப்பரேஷன் தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பல்லி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொண்டு வர்ஷினி ராஜ மன்னனுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.























