சென்னை கடற்கரை பகுதிகளில் அதீத அலை வீசக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதீத அலைக்காக விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட்டானது நாளைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதிகளில் அதீத கடல் அலையானது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 0.5 மீட்டர் முதல் 1.5 மீட்டர் வரை கடல் அலை எழும்பக் கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பழவேற்காடு, எண்ணூர், காசிமேடு, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடல் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கடல் சீற்றமாக காணப்பட்டதால் பக்தர்கள் குளிக்க திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளா, தென் தமிழ்நாட்டிற்கு நேற்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதிகளில் அதீத கடல் அலையானது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதீத அலைக்காக விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட்டானது நாளைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.