சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களும் சொந்த ஊருக்கு செல்வோரும் பேருந்துகளை பிடிக்க சென்னையில் இருந்து தூரமாக இருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழல் தற்போது இருந்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக, குத்தப்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு பயண தூரம் குறையும் என்கிறார்கள் சென்னை வாசிகள்

Continues below advertisement

புதிய பேருந்து நிலையம் ; 

சென்னை கோயம்பேட்டிலிருந்து சரியாக 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது குத்தம்பாக்கம் பேருந்து முனையம். மதுரவாயிலைத் தாண்டி பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் ஈவிபி பிலிம் சிட்டியும் ,  ஈவிபி சினிமாஸ் அமைந்திருக்கும். அதற்கு எதிரில் வீட்டு வசதி வாரியத்தின் திருமழிசை துணைக்கோள் நகரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலத்தில் தான் இந்தப் பேருந்து முனையம் அமைந்திருக்கிறது.

Continues below advertisement

ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம்

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் , திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் , 400 கோடி ரூபாயில் , புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கட்டமைப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு பேருந்துகள் செல்லும்

புதிய குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து , வேலூர் , தர்மபுரி , கிருஷ்ணகிரி , ஒசூர் , திருப்பதி , பெங்களூரு , திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து , அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும் போது ; 

முதற் கட்டமாக 250 வெளியூர் பேருந்துகளை இயக்க பட்டியல் தயாரித்துள்ளோம். தேவைப்படால் , கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேட்டில் இருந்து தற்போதும் செல்லும் பெரும்பாலான பேருந்துகள், குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் , தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்.

சென்னை புறநகர் பேருந்துகள் இயக்கம்

இந்த புதிய பேருந்து நிலையத்திலிருந்து , கிளாம்பாக்கம் , கோயம்பேடு , மாதவரம் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் , 100 மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பூந்தமல்லியில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகள் , குத்தம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் , தி.நகர் , பிராட்வே , திருவொற்றியூர் , எண்ணூர் , தாம்பரம் , கூடுவாஞ்சேரி, அடையாறு , அண்ணாசதுக்கம் , கிண்டி, கோவளம் உள்ளிட்ட கூடுதல் வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார்.