தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏபரல் 19 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. ஈரோடு மாவட்டத்தில் மக்கள் வாக்களிக்க வசதியாக 1,688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. வாக்களித்த பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கும் அறைக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமிரா பழுதானது. நள்ளிரவு 12 மணி முதல் 30 நிமிடங்கள் வரை கேமிரா இயங்கவில்லை என கூறப்படுகிறது. 


தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 70 சதவீதத்திற்கும் கீழ் தான் வாக்குப்பதிவாகி இருந்தது. இதில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராப்புரம், காங்கேயம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர். ஏப்ரல் 19 ஆம் தேதி, இதில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 பேர் வாக்களித்தனர். வாக்களித்த பின் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோட்டில் இருக்கும் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்ட்ராங் அறையில் வைக்கப்பட்டது. 


வக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றி 220 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ட்ராங் அறை வெளியே இருக்கும் கேமிரா நேற்று பழுதானது. நள்ளிரவு 12 முதல் 30 நிமிடங்கள் கேமிரா பழுதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஐ.பி. (IP) முகவரியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கேமரா பாதிக்கப்பட்டதாகவும் பழுது ஏற்பட்ட கேமரா உடனே சரி செய்யப்பட்டதாகவும் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அங்கே சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.