Leema Rose Martin: அன்று பர்மா அகதி.. இன்று பணக்கார MLA .. வியக்க வைக்கும் லீமா ரோஸின் பின்னணி!
தனக்கொரு ஒரு அங்கீகாரம் கிடைக்க, மக்களுக்கு சேவை செய்ய, லால்குடி தொகுதியை மாற்றிக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என லீமா ரோஸின் அண்ணன் மகள் மெர்லீனா தெரிவித்துள்ளார்.

லீமா ரோஸ் பணக்கார வேட்பாளர் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்ட நிலையில் விவசாயி மகளான அவருக்கு மக்களின் கஷ்டங்கள் நன்கு புரியும் என மெர்லீனா அன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் என்ற பெருமையை லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ., லீமா ரோஸ் பெற்றார். அவரைப் பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய லீமா ரோஸின் அண்ணன் மகளான மெர்லீனா பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதாவது, “என்னுடைய அத்தை லீமா ரோஸ் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ஆனால் அவருக்கு கொடுத்த தொகுதி லால்குடி. நாங்கள் தேர்தல் நேரத்தில் சென்னையில் இருந்து லால்குடி பயணப்பட்டுக் கொண்டே இருந்தோம். அதேசமயம் லீமா ரோஸ்க்கு லால்குடியில் வீடு இருப்பதால் அங்கேயே தங்கி தேர்தல் பரப்புரை கொண்டோம்.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் நிம்மதியான தரிசனம்.. அமைச்சர் ஆய்வுக்குப் பின் நடந்த மாற்றம்.. வீடியோ வெளியீடு!
எனக்கு லீமா ரோஸ் ரோல்மாடலாக திகழ்பவர். அங்கு தான் என்னுடைய அரசியல் பயணம் தொடங்கியது. வீடியோவைப் பார்க்கும்போது நான் லீமா ரோஸ் பொண்ணு என சொல்வார்கள். அவர் எனக்கு அத்தை மாதிரி. ஆதவ் அர்ஜூனாவின் மனைவி தான் தான் லீமா ரோஸின் மகளாவார். தொகுதியில் தேர்தல் பரப்புரைக்கு செல்லும்போது லீமா ரோஸை என்னுடைய அக்காவா என அங்குள்ள மக்கள் கேட்பார்கள். நான் ஓட்டுக் கேட்க போனதை பலவாறாக விமர்சித்தார்கள்.
குறிப்பாக ஒரு மூதாட்டியுடன் நான் பேசும்போது என் புடவை விலகியதைக் கூட விமர்சித்தார்கள். சாதாரணமாக புடவை கட்டினால் இடுப்பு தெரியத்தான் செய்யும். அதை பெரிதாக காட்ட வேண்டுமென்ற அவசியம் எனக்கு இல்லை. பார்ப்பவர்களை தான் சொல்ல வேண்டும். அதன்பிறகு எனக்கு புடவை கட்டவே பயமாக இருந்தது. இருந்தாலும் தமிழ்நாட்டு பெண்கள் புடவை அணிவது ஒரு கௌரவம். அதனால் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நான் புடவை கட்டுவதை நிறுத்தக்கூடாது என முடிவெடுத்தேன்.
அதேபோல் லீமா ரோஸ் பணக்கார வேட்பாளர் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது. லால்குடி தொகுதி பணம் புழங்கக்கூடிய இடம் என்றெல்லாம் சொன்னார்கள். அதுமட்டுமல்லாமல் லீமா ரோஸ் பணக்கார வேட்பாளர், அவர் ஓட்டு கேட்டெல்லாம் வரமாட்டார்கள் என கூறினார்கள்.
என்னுடைய அத்தை வயதுக்கோ, வசதிக்கோ விமர்சனம் வைப்பது போல ஒரு ஏசி ரூமுக்குள் இருந்து எல்லாம் செய்திருக்கலாம். ஆனால் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் லீமா ரோஸ். அவர் ஒரே இரவில் பணக்காரராக மாறவில்லை. எங்கள் குடும்பம் பர்மாவில் இருந்து அகதியாக வந்தவர்கள். இங்க பிழைக்க வந்த நிலையில் விவசாய குடும்பத்தில் இருந்ததால் லீமா ரோஸ்க்கு கஷ்டமெல்லாம் தெரியும்.
அவர் பணம் சம்பாதித்து இருந்திருக்கலாம். அதை மக்களுக்கு செய்ய வேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம். எங்க அத்தை இருக்கும் நிலைமைக்கு அவர் எம்.எல்.ஏ, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது தேவையில்லை. ஒரு அங்கீகாரம் கிடைக்க, மக்களுக்கு சேவை செய்ய, லால்குடி தொகுதியை மாற்றிக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நான் வாக்கு கேட்டதால் லீமா ரோஸ் ஜெயித்தார் என்பதில் உண்மையில்லை. நானும் தேர்தலில் போட்டியிடுவேன் என சொல்வதும் தவறானது. களத்தில் இறங்கி மக்களை தேடித்தேடி சந்தித்தப்போது தான் அவர்களின் கஷ்டம் எங்களுக்கு புரிந்தது” என மெர்லீனா அன் தெரிவித்துள்ளார்.
Before You Go
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்






















