= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..! டாக்சின் மதன் யூடியூப் சேனல் அட்மினாக செயல்பட்டதால் நடவடிக்கை : மதனின் மனைவி கிருத்திகா கைது..!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
சுஷில் ஹரி பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..! சிவசங்கர் பாபாவின் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய குழந்தைகள் நலக்குழு பரிந்துரை..!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பெருங்களத்தூரில் ‛பப்ஜி’ மதன்; அவர் ‛எஸ்கேப்’ ஆனதால் மனைவி மற்றும் தந்தையிடம் விசாரணை ஆபாச புகாரில் யூடியூப்பர் பப்ஜி மதனை போலீசர் தேடி வந்த நிலையில், அவரை பிடிக்க சேலம் மற்றும் சென்னை பெருங்களத்தூரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு மதன் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் பெருங்களத்தூரில் குடும்பத்துடன் மதன் வசித்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார், மதனின் மனைவி மற்றும் அவரது தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதன் எஸ்கேப் ஆன நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
பிளஸ் 2 தேர்வு ரத்துக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு ராம்குமார் என்பவர், பிளஸ் 2 தேர்வு ரத்து அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் கருத்து தெரிவித்த நீதிபதி, ‛இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கருத்து கேட்காமல் இடைக்கால தடை விதிக்க முடியாது,’ என்று, மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
சிவசங்கர் பாபா டெல்லியில் கைது: சிபிசிஐடி வசம் சிக்கினர்! பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா, டேராடூனில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிபிசிஐடி போலீசார் அவரை பிடிக்க அங்கு விரைந்தனர். ஆனால் அவர் அங்கிருந்து தலைமறைவானார். இதைத் தொடர்ந்து டில்லி காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்தாக வந்த தகவலை தொடர்ந்து, சிபிசிஐடி தனிப்படையினர் சிவசங்கர் பாபாவை கைது செய்தனர். அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சென்னை அழைத்து வர உள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ஊரடங்கால் அடைக்கப்பட்ட தாஜ்மஹால் மீண்டும் திறப்பு! உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால், அம்மாநில ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் தாஜ்மஹால் சுற்றுலா பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யும் 650 பேர் மட்டும் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
மாஜி அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமின் தள்ளுபடி சினிமா நடிகை சாந்தினியை ஏமாற்றியதாக அளித்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி, மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மணிகண்டன் கைதாக வாய்ப்புள்ளது.