Annamalai Pressmeet: சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிக்க வேண்டும் - அண்ணாமலை திட்டவட்டம்..

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Continues below advertisement

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடிய சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடியவர் சங்கரய்யா, எனவே சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும். சங்கரய்யா உடன் வேறு யாருக்கேனும் பரிந்துரைத்து பட்டியலை தமிழக அரசு  அனுப்பியதா என தெரியவில்லை. தமிழ்நாட்டில் சாதி வன்கொடுமை இருந்து வருகிறது. அரசியல் கட்சி முதல் ஊடகங்கள் மிகவும் கவனமாக கையாண்டு அதனை ஒழிக்க வேண்டும். நேற்று நடந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

மதுபான ஊழலில் மணிஷ் சிசோடியாவின் கைது முதல் கைதாகும். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அவர் மீது தவறு இருப்பதாக தெரிகிறது, அதனால் பிணை வழங்கப்படாது. அதற்கு பதிலாக விசாரணையை 6 முதல் 8 மாதங்களுக்கும் முடிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. தற்போது டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜிர்வாலை ஆஜராக கூறி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும். ஆந்திராவில் சந்திர பாபு நாயுடுவை ஜெகன் மோகன் ரெட்டி அரசு கைது செய்தது. அதை பற்றி எல்லாம் பேசவில்லை. பாஜக நடவடிக்கை எடுத்தால் மட்டும் ஏன் பேசப்படுகிறது.

இந்தியக் கூட்டணி கண்டிப்பாக உடையும். முறன்பாடு இருக்கும் நபர்கள் ஒரே இடத்தில் இருக்கிறார்கள். டிசம்பர் 3 ஆம் தேதி இந்த கூட்டணி உடையும். 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெரும். இவை மூன்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலம். டிசம்பர் 3 ஆம் தேதி ஏற்படப்போகும் விரிசல் அடுத்தாண்டு நடைப்பெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே இந்தியக் கூட்டணி இல்லாமல் போய்விடும்.

கடந்த காலங்களில் தமிழர்கள் இலங்கையில் வேலை செய்வதற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று இலங்கை தேயிலையில் முன்னிலையில் இருக்கும் காரணம் அங்கு இருக்கும் தமிழர்கள் தான். தமிழர்கள் இலங்கைக்கு சென்று 200 ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்று இலங்கையில் ஒரு விழா கொண்டாடப்பாடுகிறது. அதில் மத்திய அமைச்சர்கள் கலந்துக்கொள்கின்றனர். பாஜக தரப்பில் நானும் செல்கிறேன். யார் அரசியலுக்கு வந்தாலும் அதை வரவேற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

Continues below advertisement