பறவை காய்ச்சல்: காஞ்சிபுரம் ஆட்சியரின் முக்கிய அறிவுரை! அறிகுறிகள் தெரிந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?
Bird flu in Kanchipuram: "காஞ்சிபுரத்தில் பறவை காய்ச்சல் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்."

"பறவை காய்ச்சல் (BIRD FLU) தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்."
பறவை காய்ச்சல்
பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் இறப்பை வைத்து இறந்த பறவைகளின் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது.
இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும். இந்நோயானது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரிடையாகவும் தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்பு உள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகள் என்ன ?
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பொது மக்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
1. ப்ளு போன்ற அறிகுறிகள் (IU) - இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
2. பொதுமக்கள் தாங்களாகவே இறந்த பறவைகளை தங்கள் கைகளால் அப்புறப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே கால் நடை மருத்துவ துறைக்கு / பொது சுகாதார துறைக்கு / உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
3. பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரியவும். ஏதேனும் ப்ளு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் / அரசு மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
4. கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
5. முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.























