எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து உயிரிழந்த பாதுகாப்பு படை வீரரான ரவி கிரண், கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஆவார்.


பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் பலி:


செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது கல்பாக்கம் அனல் மின் நிலையம். அங்கு பணியாற்றும் தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்தார். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 37 வயதான ரவி கிரண் என்பது தெரிய வந்துள்ளது. அவர் பயன்படுத்திய துப்பாக்கியின் பெயர் இன்சாஸ் பட் எண் 68 ஆகும். பணி முடிந்து கல்பாக்கம் நிலையம் பேருந்தில் அவர் தனது அறைக்கு சென்று கொண்டிருந்த பொழுது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. முதற்கட்ட விசாரணையில் அவர் உடலுடன் அந்த துப்பாக்கியை அனைத்து சென்றிருக்கலாம் எனவும், பேருந்து பள்ளத்தில் ஏறி இறங்கிய பொழுது துப்பாக்கியில் இருந்து தோட்டா பாய்ந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஓராண்டுக்கு மேலாக இங்கு ரவி கிரண் பணியில் இருந்து வருகிறார். ரவி கிரண் உடன் பேருந்தில் சென்ற பிற ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்களிடம், காவல்துறையினர் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்