மேலும் அறிய

முந்திரி, பலா விவசாயிகளின் வாழ்வாதாரம்: விவசாய நிலங்களை அழித்துவிட்டால் உணவுக்கு என்ன செய்வீர்கள்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

நெல், கரும்பு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இருப்பது போல முந்திரி மற்றும் பலா விவசாயிகளுக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் 

நெல், கரும்பு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இருப்பது போல முந்திரி மற்றும் பலா விவசாயிகளுக்கும் நிர்ணயம் செய்ய வேண்டும். முந்திரி மற்றும் பலா பழங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்க விவசாயிகளுக்கு தேவையான பயிற்சியும் வசதியும் தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முந்திரி மற்றும் பலா விவசாயிகளுடன் கலந்துரையாடல்

'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபயணம் மேற்கொண்டார் அப்போது முந்திரி மற்றும் பலா விவசாயிகளை சந்தித்து பேசியவர் அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது அன்புமணியிடம் பேசிய விவசாயிகள், தானே புயலுக்கு பிறகு தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்து இருப்பதாகவும் முந்திரி மற்றும் பலாப்பழங்களுக்கு உரிய தொகை கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தனர். 

பின்னர் விவசாயிகளிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் பேச்சு:

தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 63% பேர் விவசாய மற்றும் விவசாயத்தை சார்ந்தவர்கள். விவசாயிகள் படக்கூடிய கஷ்டங்கள் சாதாரண கஷ்டங்கள் கிடையாது. இன்றைக்கு அவர்களுடைய குறைகளை கேட்கும் போது மிகுந்த வேதனையாக உள்ளது. தற்போது விவசாயிகளுக்கு உள்ள குறைகளை சாதாரணமாக தீர்க்க முடியும் ஆனால் அரசுகள் இந்த பிரச்சனைகளை கண்டு கொள்வதே இல்லை. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் முந்திரியில் மூன்றில் ஒரு பங்கு கடலூர் மாவட்டத்தில் சாகுபடி ஆகிறது.தமிழ்நாட்டில் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் முந்திரி விவசாயம் நடைபெறுகிறது.அதில் 70 ஆயிரம் ஏக்கர் விவசாயம் முந்திரி கடலூர் மாவட்டத்தில் மட்டும் நடைபெறுகிறது.'தானே' புயலால் முந்திரி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் அதன் பிறகு அவர்கள் அதிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை அவர்களை மீட்டெடுப்பதாக அரசாங்கங்கள் வாக்குறுதி கொடுத்தார்களே தவிர ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை அதனால் முந்திரி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்னும் மீண்டு வர முடியாத சூழலில் இருக்கிறார்கள். 

ஒரு ஆண்டுக்கு நான்கு லட்சம் டன் முந்திரி கொட்டைகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது இறக்குமதி யார் செய்கிறார் என்று சொன்னால் கடலூர் மாவட்டத்தின் முன்னாள் எம்பி உள்ளிட்ட பல தொழிலதிபர்கள் இறக்குமதி செய்கிறார்கள். கடலூர் மாவட்ட உள்ளூர் விவசாயிகளை ஏமாற்றி அவர்கள் சம்பாதித்து வருகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக முந்திரி விவசாயிகளுக்கு எத்தனையோ பல வாக்குறுதிகளை கொடுத்தது ஆனால் அதனை நிறைவேற்றவில்லை.

முந்திரிக்காக தனியாக மண்டலத்தை உருவாக்குவோம் வாரியத்தை அமைப்போம் என்றெல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தார். ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முக்கனிகளில் ஒரு கனியான பலாவும் கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விளைகிறது. முந்திரி, பலா போன்றவற்றிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட ஏராளமான உணவுப் பொருட்களை தயார் செய்யலாம் அவற்றை உள்ளூரிலும் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்து விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் அதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.  தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பலாவை பதப்படுத்தி சத்துமாவாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கலாம் அதன் மூலமாக பல விவசாயிகளும் பயனடைவார்கள் அரசு பள்ளி மாணவிகளுக்கும் சத்து கிடைக்கும்.

கேரளாவில் ஆராய்ச்சி செய்து பலாவிலிருந்து ஐஸ்கிரீம், ஜுஸ் உள்ளிட்ட 200 விதமான உணவுப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறார்கள். கேரளாவில் செய்யும் போது தமிழ்நாட்டில் ஏன் முடியாது?  சென்னையில் பல திருமணங்களில் பலா பிரியாணி இருக்கிறது. பலாவை பல வகைகளில் விற்பனை செய்யலாம் அதற்கு குளிர் பதன கிடங்குகளும் விவசாயிகளுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்க வேண்டியதுஅரசின் கடமை.முந்திரியால் மட்டும் அன்னிய செலாவணியாக 7000 கோடி வந்து கொண்டிருந்தது.. ஆனால் தற்போது வெறும் 2000 கோடி மட்டும் தான் வருகிறது ஏனென்றால் அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

நெல், கரும்பு போல பலா மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்!

தென்னையிலிருந்து எடுக்கப்படும் 'நீரா' பானம் போல.. முந்திரியில் இருந்து உணவுப் பொருட்களை எடுக்கலாம். ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட கூடுதலான விட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் முந்திரி பழத்தில் உள்ளது. இந்த முந்திரியை மதிப்பு கூட்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனை செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். நெல், கரும்புக்கு உள்ளது போல பலா மற்றும் முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொண்டு வரப்பட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் நான்காயிரம் ஏக்கர் பலா விவசாயம் செய்யப்படுகிறது ஆனால் பலாவிற்கு உரிய விலை கிடைப்பதில்லை.

விவசாய நிலங்களை அழித்துவிட்டு பழுப்பு நிலக்கரி எடுப்பது நியாயமா.?

பழுப்பு நிலக்கரியை எரித்து சுற்றுச்சூழலை நாசமாக்கி அதிலிருந்து மின்சாரம் எடுக்கக்கூடிய முறையை கையாள்கிறார்கள். தற்போது அறிவியல் உலகம் எங்கோ முன்னேறிவிட்டது. சூரிய மின்சக்தி காற்றாலை மூலம் என எவ்வளவு முறைகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் அவற்றையெல்லாம் விடுத்து விட்டு மண்ணையும் மக்களையும் நாசப்படுத்தக்கூடிய திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்துகிறது. விவசாயிகளின் விளை நிலத்தை அழித்து அதிலிருந்து பழுப்பு நிலக்கரியை எடுப்பது நியாயமா? விவசாய நிலங்களை அழித்துவிட்டால் உணவுக்கு என்ன செய்வீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Magalir urimai thogai: மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
மகளிர்களுக்கு கொண்டாட்டம்.! வங்கி கணக்கில் முன்கூட்டியே ரூ.1000 வரப்போகுது- தேதி குறித்த முதலைமைச்சர் ஸ்டாலின்
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்டர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Embed widget