இரட்டை தலைமை தொடர்பான விவகாரம் குறித்த தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தினை அதிமுக பழனிச்சாமி தரப்பினர் திருப்பி அனுப்பியதை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 


அக்கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்ததால், எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கடிதத்தினை வாங்காமல் திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும், கடிதம் தேர்தல் ஆணையத்தினால் இரண்டு முறை அனுப்பப்பட்டும் இரண்டு முறையும் திருப்பி அனுப்பியுள்ளது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு என்பது குறிப்பிடத்தக்கது.