EPS on Vijay: விஜய்க்கு என்ன தெரியும்? 15 நாள் ஆபீஸ் மூடியவருக்கு என்ன தெரியும்? - இபிஎஸ்-ன் அனல் பறக்கும் பிரஸ்மீட்
Edappadi Palanisamy: 15 நாட்கள் அலுவலகத்தை மூடியவர் விஜய் அவருக்கு என்ன தெரியும்? என ஆம்பூரில் எடப்பாடி பழனிசாமி பதிலடி

15 நாட்கள் அலுவலகத்தை மூடியவர் விஜய் அவருக்கு என்ன தெரியும்? என ஆம்பூரில் எடப்பாடி பழனிசாமி பதிலடி
“எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சி தற்போது சரணடைந்துள்ளது” என சேலம் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த இபிஎஸ், 15 நாட்கள் அலுவலகத்தை மூடியவர் விஜய் அவருக்கு என்ன தெரியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களை சந்திக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும், ஆட்சியில் இருப்பவர்களேயே எதிர்ப்போம் என்றும் மற்ற கட்சியை ஏன் விமர்சித்து பேச வேண்டும் என்றும் விஜய் சூசகமாக பேசினார்.
இபிஎஸ்-ஐ மறைமுகமாக விமர்சித்த விஜய்
மேலும், “கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக்கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது போன்ற அனுபவங்கள் எல்லாம் எனக்கு இல்லைதான். கட்சியை ஆரம்பித்த அண்ணா, எம்ஜிஆரை மறந்தது. கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்தது. அவர்கள் பேசியதையும், பின்பற்ற வேண்டும் எனக்கூறிய அனைத்தையும் மறந்துள்ளீர்கள்” என்று எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.

விஜய்க்கு என்ன தெரியும்?
இந்த நிலையில், விஜயின் முறைமுக பேச்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். 15 நாட்கள் அலுவலகத்தை மூடியவர் விஜய், அவருக்கு என்ன தெரியும்? என ஆம்பூரில் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி. பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சி தற்போது சரணடைந்துள்ளது என சேலத்தில் விஜய் பேசிய கேள்விக்கு, விஜய் இன்னும் தேர்தலை சந்திக்கவில்லை, எந்த ஆட்சி அமைக்கப்படும் என மக்களுக்கு தெரியும், விஜய்க்கு என்ன தெரியும், உங்களுக்கு தெரியும் பிரச்சனை நடந்து 72 மணி நேரத்திற்கு பிறகு வரவில்லை, கடமையை செய்யவில்லை, 15 நாள் அலுவலகத்தை மூடியவர் விஜய். அவர் பிரச்சனையை சந்திக்க வேண்டும் என பேசினார்.























