OPS: இரட்டை இலை விவகாரம், இடைத்தேர்தல் வேட்பாளர், பொதுக்குழு குறித்து  உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நிலையில், நிருபர்களைச் சந்தித்த வைத்தியலிங்கம், எந்த குழப்பமும் இல்லை. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு பின்டைவு. எடப்பாடி பழனிசாமிக்கு கையெழுத்து போட அதிகாரம் இல்லை. அதேபோல் ஓ.பி.எஸ்.க்கும் அதிகாரம் இல்லை. நீதிமன்றம்  அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை சொல்லியிருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம், எல்லாம் நன்மைக்கே என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நிருபர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று கூறினார்.