மேலும் அறிய

CV Shanmugam: சிவி சண்முகம் சொன்ன அந்த ஒரு வார்த்தை! இபிஎஸ்-ஐ நிம்மதி மூச்சு விட வைத்ததா?

சட்டமன்ற உறுப்பினராக தனது பணியை முழுமையாக செய்வேன் என்று சிவி சண்முகம் கூறியிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அதிமுக-வில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட மோதல் தற்போது அடங்கி எடப்பாடி பழனிசாமி தலைமையில் மறுபடியும் ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர். அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கமே சேர்ந்த நிலையில், சிவி சண்முகம் மற்றும் சிவி விஜயபாஸ்கரின் நிலைப்பாடு என்னவென்று தெரியாத நிலை நீடித்து வருகிறது.

முழுமையாக பணியாற்றுவேன்:

சிவி சண்முகத்தை தங்கள் பக்கம் இழுக்க தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இன்று மயிலம் தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். அவர் நன்றி தெரிவித்தபோது சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த மக்களுக்கு முழுமையாக கடமையாற்றுவேன் என்று பேசினார். எந்த வேண்டுகோள், கோரிக்கை என்றாலும் தன்னை அணுகலாம் என்று வேண்டுகோள் விடுத்தார். 

இதன்மூலம், அவர் தனது எம்எல்ஏ பதவியிலே தொடர உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. அதிமுக-வில் தவிர்க்க முடியாத தலைவரான சிவி சண்முகம், சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மிக கடுமையாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார். குறிப்பாக, திமுக தயவில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயற்சித்தார் என்ற விமர்சனம் அதிமுக மட்டுமின்றி திமுக-வையும் மிக கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கியது.

நிம்மதி மூச்சுவிட்ட எடப்பாடி பழனிசாமி:

இந்த சூழலில், எடப்பாடி பக்கம் அனைவரும் சென்ற நிலையில், சிவி சண்முகம் வராதது அதிமுக தொண்டர்களுக்கு சற்று வேதனையாக இருந்தது. விழுப்புரத்தில் செல்வாக்கு மிகுந்த நபராக செயல்பட்டு வரும் சிவி சண்முகம் அதிமுக-விலே இருக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே செயல்பட வேண்டும் என்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடரும் சமரச முயற்சி:

இந்த சூழலில், அவர் சட்டமன்ற உறுப்பினராக தனது கடமையை முழுமையாக ஆற்றுவேன் என்று அவர் கூறியிருப்பது அதிமுக தொண்டர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதனால், சிவி சண்முகம் விரைவில் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பார் என்று கருதப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் தங்கமணி, வேலுமணி மூலமாக அவரை சமாதானப்படுத்தும் முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்பி வேலுமணியுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சபாநாயகரிடம் கடிதம் அளித்த விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் தனியாக புதுக்கோட்டையில் ஆலோசனை நடத்தினார். அவரது முடிவு என்னவென்று தெரியாமலும் அதிமுக தலைமை குழம்பி உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் முக்கிய பலமாக அவர் கருதப்படும் நிலையில், அவரது முடிவு என்னவென்றும் இபிஎஸ் தரப்பு எதிர்பார்த்து காத்துள்ளது. இவர்கள் இருவரும் அதிமுக-வில் நீடிப்பது அதிமுக-விற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
மது போதையில் மகளுக்கு பாலியல் சீண்டல் !! கூலி தொழிலாளி சிறையில் அடைப்பு
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் உலக தரத்தில் உருவான பிரம்மாண்ட கட்டடம்... என்ன வசதிகள் உள்ளது முழு விவரம் !
மதுரையில் நாளை (05.06.26) மற்றும் நாளை மறுநாள் மின்தடை... வெளியானது முழு லிஸ்ட் !
மதுரையில் நாளை (05.06.26) மற்றும் நாளை மறுநாள் மின்தடை... வெளியானது முழு லிஸ்ட் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget