தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  அடுத்த வரும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


28.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


29.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


30.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


01.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நாங்குநேரி (திருநெல்வேலி) 7, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), அதிராம்பட்டினம் AWS (தஞ்சாவூர்), வம்பன் KVK (புதுக்கோட்டை), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 6, திருநெல்வேலி AWS, சூரலக்கோடு (கன்னியாகுமரி), திண்டுக்கல், திருப்புவனம் (சிவகங்கை), பாளையங்கோட்டை (திருநெல்வேலி) தலா 5, இலுப்பூர் (புதுக்கோட்டை), தாளவாடி (ஈரோடு), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


இருப்பினும் சில மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக தான் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 38.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 35.8 டிகிரி செல்சியஸ் பதிவானது. வெப்பநிலை சற்று தணிந்திருந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக தான் உள்ளது.