தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதன்படி இன்று, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக  மாவட்டங்கள்,   புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


நாளை (ஏப்ரல் 3 ஆம் தேதி) தென் தமிழகம்,  மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு  இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய தமிழக  மாவட்டங்கள்  மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை.  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


ஏப்ரல் 8 ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:


இன்று முதல் 6 ஆம் தேதி வரை, தமிழகத்தில்   ஒருசில  இடங்களில்    அதிகபட்ச    வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில்  2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.


அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச    வெப்பநிலை வட தமிழக உள்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 39°  – 41° செல்சியஸ், உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37°  – 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34°  – 37° செல்சியஸ் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈரப்பதம்: அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80 % ஆகவும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்  என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அதேபோல், 24 மணி நேரத்தில், ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 40.4° செல்சியஸ் , கரூர் பரமத்தியில் 40.2° செல்சியஸ், சேலம் மற்றும் திருச்சியில் 39.3°  செல்சியஸ், மதுரை நகரம் 39.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது. நாமக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸ் முதல் 39° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. அதே போல் சென்னையில், சென்னையில் அதிகபட்ச   வெப்பநிலை இயல்பாக  இருந்தது. (மீனம்பாக்கம் : 35.7°  செல்சியஸ்  & நுங்கம்பாக்கம் : 35.0°  செல்சியஸ்) பதிவாகியுள்ளது.