தேர்தலுக்கு தயராகும் தவெக

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 36 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் விரைவுப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் தவெக தனி அணியாக களத்தில் இறங்கவுள்ளது. அந்த வகையில் அக்கட்சி தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், புஸ்ஸி ஆனந்த் தி.நகர் தொகுதியிலும், ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியிலும் களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை திமுகவின் கோட்டையில் தவெகவின் கோட்டையாக மாற்ற அதிரடியாக பிளான் போட்டு தவெக களத்தில் இறங்கியுள்ளது. 

Continues below advertisement

தவெக ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, தொடர்ந்து களப்பணி ஆற்றுங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக  கொள்வோம். அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக உங்கள்  ஒவ்வொருவரின் உழைப்பும் மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

அடிச்சா திருப்பி அடிக்காதீங்க

விசில் சின்னத்தை வீடுதோறும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. எதிர்க்கட்சியினர் யாராவது நம்மை தாக்கினால் நீங்கள் யாரும் திருப்பி அடிக்க வேண்டாம். அடி வாங்கி கொள்ளுங்கள்; நம்மை அடிக்க அடிக்க அதுதான் நமக்கு பலமாக மாறும்.எந்தப் பிரச்சனை வந்தாலும் அதை நாம் சட்ட ரீதியாக சந்திப்போம்.வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு களப்பணி ஆற்றுங்கள் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். 

Continues below advertisement