School Holiday : அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
School consecutive holidays : தமிழகத்தில் அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரவுள்ளதால் சந்தோஷத்தில் மாணவர்கள் துள்ளி குதித்து கொண்டாடி வருகின்றனர்

விடுமுறை கொண்டாட்டம்
விடுமுறை என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாட்டம் தான். அந்த வகையில் தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை கிடைத்தால் வெளியூர்களுக்கு நண்பர்கள், உறவினர்களோடு பறந்து விடுவார்கள். அதிலும் தற்போது வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் ஊட்டி, கொடைக்கானல் என மலைப்பகுதிகளுக்கு குடும்பத்தோடு செல்ல தொடங்கியுள்ளனர். அதே நேரம் கடந்த வாரம் முதல் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இதனால் தென்காசி மாவட்டத்தில் மக்கள் குவிந்து வருகிறார்கள்.
3 நாட்கள் தொடர் விடுமுறை
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறந்து செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வரும் நிலையில், எப்போது அடுத்த விடுமுறை கிடைக்கும் என ஆவலோடு காலண்டரை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது 3 நாட்கள் தொடர் விடுமுறையானது கிடைக்கவுள்ளதால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகிறார்கள்.
குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்
அந்த வகையில் ஜூன் 26ஆம் தேதி மொஹரம் பண்டிகை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. ஜூன் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக உள்ளதாலும் அடுத்த நாட்களான சனிக்கிழமை மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதாலும் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்பது கிடைக்காது. ஆனால் இந்த ஜூன் மாதம் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கும் குஷியான மாதமாக மாறியுள்ளது. எனவே ஜூன் 26, 27, 28 என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் தற்போதே மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுற்றுலாவிற்கு செல்ல பிளான் செய்ய தொடங்கியுள்ளனர்.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்






















