முடிவுக்கு வந்த 6 நாள் போராட்டம்: நகர்ந்தது ‛எவர்க்ரீன்’

சூயஸ் கால்வையின் குறுக்கே சிக்கியிருந்த தைவம் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் ‛எவர்க்ரீன்’ தற்போது மீண்டும் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.

Continues below advertisement

உலக புகழ்பெற்ற சூயஸ் கால்வையின் குறுக்கே கடந்த 6 நாட்களுக்கும் மேலாக சிக்கியிருந்த தைவம் நாட்டை சேர்ந்த சரக்கு கப்பல் தற்போது மீண்டும் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. சுமார் 1300 அடி நீளமும் 2 லட்சம் மெட்ரிக் டன் எடையும் கொண்டதுதான் எவர்க்ரீன் சரக்கு கப்பல். தைவான் நாட்டை தலைமையகமாக கொண்டு செயல்படும் எவர்க்ரீன் மெரைன் கார்ப் நிறுவனத்தின் இந்த சரக்கு கப்பல், கடந்த செவ்வாயன்று (மார்ச் 23) சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">The boat that was stuck in the Suez Canal is floating!!! <a >pic.twitter.com/WAYC8p8MdZ</a></p>&mdash; Barstool Sports (@barstoolsports) <a >March 29, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

தற்போது எகிப்தில் நிலவும் கடுமையான சீதோஷண நிலமையால் கால்வாயின் குறுக்கே சிக்கியிருந்த கப்பலை அகற்றுவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் சுமார் 6 நாட்கள் கடும் முயற்சிக்கு பிறகு தற்போது மீண்டும் கப்பல் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola